அப்பாடா.. நான்கூட வாங்கி வச்ச மாஸ்க் எல்லாம் வீணாப் போயிடுமோனு பயந்துட்டேங்க!
சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பது பற்றிய மீம்ஸ்கள்.
சென்னை: சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தியை வைத்து ஜாலி மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்தத் தலைமுறைக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொரோனா தந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். புதிது புதிதாய் உருமாறி வரும் கொரோனா வைரஸால் முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என அலைகள் ஓய்வதில்லை என மக்களைப் புலம்ப வைத்து விட்டது கொரோனா. ஊரடங்கு, மாஸ்க், தனிமனித இடைவெளி என இப்போதுதான் மக்கள் புதிய இயல்புநிலையில் வாழப் பழகி வருகின்றனர்.
ஒமைக்ரானால் மூன்றாம் அலையில் அதிக பாதிப்புகளை உலக நாடுகள் சந்திக்கவில்லை. சரி இப்படியே கொரோனா தாக்கம் நீர்த்துப் போய் விடும் என மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள் புதிய திரிபு ஒன்றைக் கண்டுபிடித்து அதிர்ச்சிக் கொடுத்திருக்கிறது சீனா. இந்த புதிய திரிபின் காரணமாக அங்கு முக்கிய நகரத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஜீன் மாதம் இந்தியாவில் நான்காம் அலை வரலாம் என ஆய்வுகள் கூறி வரும் நிலையில், சீனாவின் இந்த புதிய திரிபு கண்டுபிடிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதற்கெல்லாம் அஞ்சுபவர்களா நம் மக்கள். உலகமே கொரோனாவைப் பார்த்து பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த போதே, அதனை மீம்ஸ் போட்டு கலாய்த்தவர்கள் நம்மவர்கள். இப்போது மட்டும் விடுவார்களா..
சமூகவலைதளங்களில் மக்களின் கவலைகளையே ஜாலியான மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications