கேட்ட உடனே ஒரு மார்க் போட்டு.. பாஸ் பண்ணி விடுற சார் எல்லாம் ரேர் பீஸ் செட்டியார்!
சமூகவலைதளங்களில் பொதுத்தேர்வு பற்றிய மீம்ஸ்கல் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஆரம்பமாகி விட்ட சூழலில், சமூகவலைதளங்களிலும் தேர்வு, வினாத்தாள், தேர்வு அறை என விதவிதமாக மீம்ஸ்களைப் போட்டு கலகலக்க வைத்து வருகின்றனர் மீமர்கள்.
மார்ச், ஏப்ரல் மாதங்கள் வந்து விட்டாலே வெயிலைப் போலவே, மாணவர்களை மிரட்டும் மற்றொரு விசயம் பொதுத்தேர்வுகள். அதிலும் குறிப்பாக, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களது கல்வியின் அடுத்த கட்டத்தை நிர்ணயிக்கும் தேர்வுகள் இவை என்பதால், அதிக அக்கறையுடன் இந்தத் தேர்வை எதிர்கொள்வார்கள்.
வழக்கம் போலவே, 'என்ன வேணா நடக்கட்டும்.. நா சந்தோசமா இருப்பேன்..' என இந்தத் தேர்வுகளை மட்டுமல்ல.. எந்தத் தேர்வையும் நாங்கள் கண்டு கொள்ள மாட்டோம் என அலட்டிக் கொள்ளாத ஒரு குரூப்பும் உண்டு. வகுப்பில்தான் கடைசி பெஞ்ச் மாணவர்கள் என இவர்களை மீமர்களால் கலாய்க்கப்படுகிறார்கள் என்றால், தேர்விலும் இவர்களை விடுவதாயில்லை.
ஒருபுறம் பரபரப்பாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஆரம்பமாகி விட்ட சூழலில், சமூகவலைதளங்களிலும் தேர்வு, வினாத்தாள், தேர்வு அறை என விதவிதமாக மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் மீமர்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில்பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...



























Click it and Unblock the Notifications