‘நீங்க ஆடுற ஆட்டத்துக்கு 5நாள் எதுக்கு.. 3நாளே போதும்’.. ஆஸி. அணியை பங்கம் செய்யும் மீம்ஸ்கள்!
இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை இரண்டாவது முறையாக வென்றிருப்பதை மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து இரண்டு முறை ஆஸ்திரேலிய அணியை வென்று முன்னிலை வகுத்து வருவதை கிரிக்கெட் ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர்.
தேசிய அளவில் கவனம் பெறும் விளையாட்டுகளில் எப்போதுமே கிரிக்கெட் முன்னிலை பெற்று விடுகிறது. காரணம் மற்ற விளையாட்டுகளைவிட கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் அதிகம் என்பதுதான். அதனாலேயே முக்கிய கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களை திருவிழாவாக சமூகவலைதளங்களில் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள் கிரிக்கெட் பிரியர்கள். அதிலும் மிகப்பெரிய அணிகளுடன் மோதி இந்திய அணி வென்று விட்டது என்றால், சின்ராசுக்களை (அதாங்க தீவிர கிரிக்கெட் ரசிகர்கள்..) கையிலேயே பிடிக்க முடியாது.
இப்போதும் அப்படித்தான் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை போட்டிகளை வைத்து, பேட்-பால் இல்லாமல் சமூகவலைதளங்களில் மீம்ஸ்களாலேயே மேட்ச் ஆடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
சும்மாவே ஆடுபவர்கள், இப்போது இந்திய அணி தொடர்ந்து இரண்டு முறை ஆஸ்திரேலிய அணியை பரிதாபமாக தோற்கடித்துள்ளது என்றால் சும்மா இருப்பார்களா? மீம்ஸ்களால் தங்களது வெற்றிக் களிப்பை கொண்டாடி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில்பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...



















Click it and Unblock the Notifications