கரண்ட் இல்ல.. போர் அடிக்குது.. யார் அக்கௌண்ட்லயாவது ஒரு 8,000 கோடி போட்டு விடுவோமா?
சென்னை: 'யார் யார் வங்கிக் கணக்கிலோ கோடி கோடியாய் தவறுதலாக பணம் வருகிறது. எங்கள் அக்கௌண்ட் யார் கண்ணிற்கும் தெரியவில்லையா?' என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
சம்பளம் வாங்கிய அடுத்த நாளே கஜானா காலி எனப் புலம்பும் அளவிற்கு கமிட்மெண்ட்களுடன் வாழ்பவர்கள் நம் மக்கள். இனி அடுத்த சம்பளத்திற்கு ஒரு மாதம் காத்திருக்க வேண்டுமே, அதற்குள் கூரையை பிய்த்துக் கொண்டு ஏதாவது ஒரு வழியில் பணம் கொட்டாதா என ஒவ்வொரு மாதமும் காத்திருப்பவர்கள் ஏராளம்.
அவர்களது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது மாதிரி, சமீபகாலமாக தவறுதலாக பல வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்ட செய்திகள் ஊடகங்களில் உலா வருகின்றன. பிறகென்ன, 'யார் யார் அக்கௌண்ட்லயோ பணம் போடுறாங்களே.. நமக்கு யாரும் அப்படி ஒரு ஆயிரம் ரூபாய் கூட தவறுதலாக அனுப்ப மாட்டேன் என்கிறார்களே..' என தங்களின் ஆதங்கத்தை எல்லாம் மீம்ஸ் போட்டு கொட்டி வருகின்றனர் சமூகவலைதளங்களில்.




















Click it and Unblock the Notifications