ஒருநாள் இந்த மிஷினை வாடகைக்கு தருவீங்களாண்ணே?.. வீட்ல ஒரு கட்டு கரும்பு கிடக்கு!
சென்னை : பொங்கல் பண்டிகை முடிந்தாலும் இன்னமும் வீட்டில் சாப்பிட பொங்கலும், கரும்பும் தீர்ந்தபாடில்லை என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
எப்போது பொங்கல் பண்டிகை வரும் கரும்பு சாப்பிடலாம் என ஆசையாக காத்திருக்கும் மக்களுக்கு, கரும்புக் கட்டை நேரில் பார்த்ததுமே பாதி வயிறு நிரம்பி விடும். பிறகென்ன கரும்பை வைத்து வைத்து இரண்டு, மூன்று நாட்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டாலும், வாய்தான் வலிக்குமே தவிர கரும்புக்கட்டுத் தீராது.
பிறகென்ன, பொங்கல் பானையில் பொங்கல் எப்போது தீரும் என எதிர்பார்ப்பது மாதிரியே, கரும்புக்கட்டும் எப்போது தீரும் என யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். பேசாமல் கரும்பு ஜீஸ் போடும் மிஷின் கிடைத்தால், இருக்கிற கரும்பை எல்லாம் ஜூஸாகக்கூட போட்டுக் குடித்து விடலாம் என்ற நிலைமைக்கு கடைசியில் வந்து விடுவார்கள்.
இப்படி மக்கள் மனதிற்குள் நினைப்பதை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications