இவங்களை நம்பி கொஞ்ச நேரம் வெளிய போக முடியலை.. உடனே ஆம்லெட் போட்டு சாப்பிட்டுடுறாங்க!
புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிட முடியாத ஆதங்கத்தை மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: புரட்டாசி மாதம் பிறந்து ஒரு வாரம் ஆகிவிட்ட போதும், இன்னமும் சைவ மோடுக்கு மாற முடியாமல் மீம்ஸ் போட்டு புலம்பி வருகிறார்கள் அசைவப் பிரியர்கள்.
அசைவப் பிரியர்களுக்கு தமிழில் பிடிக்காத மாதமென்றால் அது புரட்டாசிதான். 'அதெப்படிங்க ஒரு மாசம் அசைவமே சாப்பிடாமல் இருப்பது..' என வாய்விட்டு புலம்பினாலும், வீடுகளில் உள்ள கட்டுப்பாட்டால், அசைவ உணவகங்களை எச்சிலை விழுங்கி விட்டு கடந்து செல்கிறார்கள் சிலர்.
என்னதான் நாக்கை கட்டி வைத்தாலும், அசைவம் சாப்பிடாத அதன் ஆதங்கத்தை மீம்ஸ் போட்டாவது சரி செய்து கொள்வது என நினைக்கிறார்கள் போலும். அதனாலேயே புரட்டாசி மாதம் பிறந்து ஒரு வாரம் ஆகிவிட்ட போதும், சமூகவலைதளங்களில் புரட்டாசி மீம்ஸ்களுக்கு குறைவேயில்லை.
இந்த மாதம் யாரும் அசைவ விருந்துக்கு யாரும் கூப்பிட்டுவிடக் கூடாது என ஒரு குரூப் மீம்ஸ் போட்டு புலம்ப, மற்றொரு குரூப்போ இந்த மாதம் கறிக்கடைக்காரர்களைவிட, காய்கறிக் கடைக்காரர்கள்தான் அதிகம் கல்லா கட்டுவதாக கெத்து காட்டி வருகிறார்கள். சைடு கேப்பில் நாய்களின் மைண்ட்வாய்ஸாக, 'நீங்க தான எசமான் விரதம், ஆனா எனக்கும் கறியைக் கண்ணுல காட்ட மாட்டேங்குறீங்களே..' என கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும், புரட்டாசி மாதம் பற்றிய நகைச்சுவையான சில மீம்ஸ்கள் உங்களுக்காக...