அக்சென்சர் கொடுத்த வார்னிங்.. அரண்டுபோன இன்போசிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல்.. மிகப்பெரிய 'லாஸ்'!

Subscribe to Oneindia Tamil

உலகளாவிய தகவல் தொழில்நுட்ப (IT) சேவை துறைக்கு புதிய எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. ஏற்கனவே ஏஐ மூலம் பெரும் ஆட்டத்தை கண்டு வரும் ஐடி நிறுவனங்கள் அக்சென்சர் வெளியிட்ட அறிவிப்பால் ஒட்டுமொத்த இந்திய ஐடி நிறுவனங்களும் அரண்டு போய் உள்ளது.

உலகின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான Accenture, டிசிஎஸ் நிறுவனத்தை விடவும் ஊழியர்கள், வருவாய், வர்த்தகத்தில் பெரியது. இந்நிறுவனம் நடப்பு ஆண்டின் வருவாய் கணிப்பு மற்றும் புதிய ஒப்பந்தங்கள் குறித்த வெளியிட்ட தகவல்கள், இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஐடி நிறுவனங்களின் பங்குகளை கடுமையாகப் பாதித்துள்ளன.

Accenture

இதன் விளைவாக, Infosys, TCS, HCL Tech, Tech Mahindra உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பங்குகள் ஒரே நாளில் பெரும் சரிவை எதிர்கொண்டு உள்ளதால், இந்த நிறுவனங்களில் முதலீட்டு செய்துள்ளவர்கள் சுமார் ரூ.1.35 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளனர்.

அக்சென்சர் கொடுத்த வார்னிங்

அயர்லாந்து நாட்டின் டப்ளின்-ஐ தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அக்சென்சர் நிறுவனம், 2026 நிதியாண்டுக்கான வருவாய் வளர்ச்சி குறித்த தனது வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனது முந்தைய எதிர்பார்ப்பை குறைத்துள்ளது. முன்னர் 3% முதல் 5% வரை வளர்ச்சி வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்த அக்சென்சர், தற்போது 3% முதல் 4% வரை குறைத்து தனது கணிப்பை திருத்தியுள்ளது. மேலும், புதிய ஆர்டர்கள் அளவும் குறைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியான பிறகு, அக்சென்சர் நிறுவனத்தின் பங்குகள் அமெரிக்க சந்தையில் 18% வரை சரிந்தன. இதன் தாக்கம் இந்திய ஐடி நிறுவனங்களின் பங்குகளிலும் பெரிய அளவில் பிரதிபலித்தது.

இன்போசிஸ், டிசிஎஸ் பங்குகள் கடும் சரிவு

நிப்டி ஐடி குறியீடு 6% வரை சரிந்தது. இன்போசிஸ் பங்கு 8%க்கும் மேல் சரிந்தது, அக்டோபர் 2020-க்குப் பிறகு இல்லாத அளவுக்கு குறைந்தது. டிசிஎஸ் பங்கு 5%க்கும் மேல் சரிந்து, ஜூன் 2020-க்குப் பிறகு இல்லாத அளவுக்கு தொட்டது. எச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, எல்டிஐ மைண்ட்ட்ரீ, பெர்சிஸ்டண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் 5% முதல் 6% வரை சரிந்தன.

இந்த சரிவால், நிப்டி ஐடி நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.21.57 லட்சம் கோடியாக குறைந்தது. ஒரே நாளில் ரூ.1.35 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டாளர்களின் செல்வம் கரைந்துள்ளது.

ஏஐ தாக்கம் மற்றும் தேவை குறைவு

அக்சென்சர் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான புதிய திட்டங்களின் அளவு அதிகரித்து வருவதாக தெரிவித்தாலும், வாடிக்கையாளர்களின் செலவு செய்யும் அளவு மற்றும் புதிய வணிக வாய்ப்புகள் குறைந்துள்ளதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

உலகிலேயே பெரிய ஐடி சேவை நிறுவனத்திற்கே இத்தகைய நிலை என்றால், ஏற்கனவே ஏஐ தொழில்நுட்பத்தால் தடுமாறி வரும் இந்திய நிறுவனங்களுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படும் என்பது அடுத்த முக்கிய கேள்வியாக உள்ளது. மேலும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் 2027 நிதியாண்டு வளர்ச்சி குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஐடி சேவைக்கான தேவை குறைவு, செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் புவிசார் அரசியல் பிரச்சனைகள் ஆகியவை இணைந்து, இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரிய அளவிலான பங்கு விற்பனையை தூண்டியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+