செய்ததையே மறந்துட்டாங்க.. எனக்கு நெஞ்சு வலியே வந்துரும் போல! உருக்கமாக பேசிய வனிதா
சென்னை: தமிழ் சினிமாவில் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் பிரபலங்களில் நடிகை வனிதா விஜயகுமார் முக்கியமானவர். சர்ச்சை என்றாலும் சரி, குடும்பம் என்றாலும் சரி, தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை எந்த தயக்கமும் இல்லாமல் பகிர்ந்து கொள்வது அவரது இயல்பு. அந்த வகையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டி சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியரின் மூத்த மகளான வனிதா, சிறுவயதிலிருந்தே சினிமா உலகிற்கு அறிமுகமானவர். நடிகையாகவும், தொலைக்காட்சி பிரபலமாகவும், பிக் பாஸ் போட்டியாளராகவும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார். ஆனால் அவரது திரை வாழ்க்கையை விட குடும்ப வாழ்க்கை தொடர்பான செய்திகள் தான் அடிக்கடி பேசுபொருளாக மாறி வருகின்றன.
கடந்த பல ஆண்டுகளாக தனது குடும்பத்தினரிடமிருந்து விலகி தனியாக வாழ்ந்து வரும் வனிதா, குடும்ப உறவுகள் குறித்து மீண்டும் மனம் திறந்து பேசியுள்ளார்.

நடிகை வனிதாவின் பேட்டி
சமீபத்திய பேட்டியில் அவர் பேசும்போது, தனது அக்கா அனிதா விஜயகுமார் ஒரு நிகழ்ச்சியில் கூறிய விஷயம் தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "என்னுடைய அக்கா அனிதா ஒரு பேட்டியில், அவருடைய டெலிவரி சமயத்தில் பிரீத்தாதான் தன்னை முழுமையாக கவனித்துக் கொண்டார் என்று சொன்னார். அந்த வீடியோவை பார்த்ததும் எனக்கு ஷாக்காகிவிட்டது. ஏனென்றால் அந்த நேரத்தில் அவருடன் இருந்தது நான். நான் செய்த விஷயங்களுக்கு கிரெடிட் வேறு யாருக்கோ போகிறது" அதை நினைத்து பொறாமை படவில்லை ஆனால் எதற்காக இப்படி மாற்றிப் பேச வேண்டும் என்பதுதான் என் கேள்வியாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.
அதோடு அவர் நிற்கவில்லை. "இது முதல் முறையல்ல. எப்போதுமே நான் செய்த விஷயங்களுக்கு வேறு பெயர்கள் சொல்லப்படும். பிரீத்தா பார்த்தாங்க, ஸ்ரீதேவி பார்த்தாங்க என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்று அந்த சம்பவத்தில் இருந்தவர்களுக்கு தெரியும். இதெல்லாம் எந்த மனநிலையில் சொல்லப்படுகிறது என்று எனக்கு புரியவில்லை" என்றும் கூறியுள்ளார்.
மேலும் தனது மகன் ஸ்ரீஹரியை உதாரணமாக கூறிய வனிதா, "இப்போது நான் என் மகன் ஸ்ரீஹரியுடன் பேசவில்லை. அதற்காக அவன் செய்த விஷயங்களை என் மற்ற மகள்களான ஜெயா அல்லது ஜோவிதா செய்தார்கள் என்று நான் சொன்னால் எப்படி இருக்கும்? அதை பார்த்தால் என் மகன் என்ன நினைப்பான்? நான் செய்ததை மறந்து வேறு யாருக்காவது புகழ் கொடுத்தால் அதை செய்தவருக்கு எப்படி இருக்கும்? அதே உணர்வு தான் எனக்கும் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் ஆறுதல்
இந்த பேட்டியில் வனிதாவின் குரலில் இருந்த வருத்தம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக குடும்ப உறவுகளில் ஏற்பட்டிருக்கும் தூரம் இன்னும் அவரை பாதித்து வருகிறதா என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
வனிதா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் பல ஆண்டுகளாக செய்திகளில் இடம்பிடித்து வருகின்றன. குறிப்பாக சொத்து விவகாரம், குடும்ப உறவுகள், தனிப்பட்ட வாழ்க்கை உள்ளிட்ட பல காரணங்களால் அவர் குடும்பத்திலிருந்து விலகி வாழ்ந்து வருகிறார். பல நேரங்களில் தந்தை விஜயகுமார், சகோதரிகள் பிரீத்தா, ஸ்ரீதேவி மற்றும் அனிதா குறித்து அவர் வெளிப்படையாக பேசியிருப்பதும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த முறை அவர் பேசியது கோபத்தை விட மனவருத்தத்தை அதிகமாக வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். "ஒருவர் செய்த உதவிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற உணர்வு அவரை பாதித்திருக்கிறது" என்றும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
ரசிகர்கள் கருத்து
இதற்கிடையில், வனிதாவுக்கு ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் பல கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. "குடும்பத்தில் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் ஒருவர் செய்ததை மறக்கக் கூடாது", "அங்கீகாரம் கிடைக்காதது தான் மனிதர்களை அதிகம் காயப்படுத்தும்" என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.














Click it and Unblock the Notifications