மழை வந்தா ஸ்டேட்டஸ் வைக்கிறது இந்த காலம்.. பேப்பர்ல கப்பல் செஞ்சி விளையாடறதுதான் 90ஸ் கிட்ஸ் காலம்!
மழை பற்றிய மீம்ஸ்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: மழை பெய்து குளுகுளுவென மாறிய வானிலையைப் பற்றி, ஜிலுஜிலு என சாரலாக மீம்ஸ் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மே மாதம் முடிந்தும் வெயில் இப்படிக் கொளுத்துகிறதே என புலம்பியவர்கள் எல்லாம் வாயடைத்துப் போகும் வகையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் தூறலாகவும், சாரலாகவும் பெய்து வரும் மழை, பல இடங்களில் இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்து வருகிறது.
வாரணம் ஆயிரம் சூர்யா மாதிரி, 'சட்டென மாறிய வானிலை..' என பாடத் தோன்றும் அளவிற்கு, இந்த ஊரிலா வெயில் கொளுத்தியது என ஆச்சர்யப்பட வைக்கும் அளவிற்கு குளுகுளுவென வானிலையை மாற்றி விட்டது மழை. நம் மக்கள்தான் வெயில் வாட்டினாலும் புலம்புவார்கள், மழை கொட்டினாலும் புலம்புவார்களே.. இப்போதும் அப்படித்தான்..!
வெயில் காலங்களில் கொஞ்சம் மழை பெய்தால் தேவலை என்றவர்கள்கூட, இப்போது இப்படி மழை கொட்டிக் கொண்டே இருந்தால், வேலைக்குப் போக வேண்டாமா.. துணி காய வேண்டாமா என மீம்ஸ் போட்டு மழையைத் திட்டி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, மழையையும், சாலையில் தேங்கும் நீரையும் பார்த்தவுடன் பேப்பர் கப்பல் விடும் ஞாபகத்திற்கு சென்று விட்டனர் 90ஸ் கிட்ஸ்.
இப்படியாக கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் மழையைப் பற்றி, குளுகுளு மீம்ஸ்கள் பல இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. இதோ அவற்றில் சில உங்களுக்காக...