பழக்கவழக்கமெல்லாம் நோன்பு கஞ்சியோட நிறுத்திக்கணும்.. பிரியாணி கேட்டெல்லாம் வீட்டுபக்கம் வரக்கூடாது!
சென்னை: வழக்கமாக ரம்ஜான் வருகிறதென்றாலே, பிரியாணி மீம்ஸ்களால் சமூகவலைதளப் பக்கங்கள் கமகமத்துக் கிடக்கும். இந்தமுறை பிரியாணியோடு, நோன்புக் கஞ்சியையும் மீம்ஸ் போட்டு நாசூக்காக இஸ்லாமிய நண்பர்களிடம் கேட்டு வருகின்றனர் நம் புத்திசாலி நெட்டிசன்கள்.
என்னதான் காசு கொடுத்து கடையில் எவ்வளவு வேண்டுமானாலும் பிரியாணி சாப்பிட முடியும் என்றாலும்கூட, இஸ்லாமிய நண்பர்கள் வீட்டில் அன்பைக் கலந்து பரிமாறும் பிரியாணியின் சுவையே வேறுதான். அதனால்தான், ஆண்டு முழுவதும் கேர்ள் பிரண்டுகளைத் தேடியவர்கள், தங்களது ஃபாய் பிரண்டுகளைத் தேடும் நாள்தான் ரம்ஜான் என ஒவ்வொரு ஆண்டும் மறக்காமல், இஸ்லாமிய நண்பர்களுக்கு பிரியாணி கேட்டு மீம்ஸ் விடு தூது அனுப்புவது நம் நெட்டிசன்களின் வழக்கம்.

முன்பெல்லாம் ரம்ஜான் அன்று பிரியாணி கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தவர்கள், இப்போது ரொம்பவே அட்வான்சாக ரம்ஜானுக்கு இன்னும் சில வாரங்கள் உள்ள போதே தங்கள் கோரிக்கையை மீம்ஸ்களாக பகிர ஆரம்பித்து விட்டனர். வழக்கமாக பிரியாணி கேட்டு மட்டும்தான் மீம்ஸ் போடுவார்கள். ஆனால் இந்த முறை பிரியாணியோடு நோன்பு கஞ்சி கேட்டும் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications