இவருக்கு ஒரு மாசம் லீவு விட்டது பத்தலையாம்.. இன்னும் 10 நாள் எக்ஸ்ட்ராவா லீவு வேணுமாம்!
சென்னை: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதை வைத்து, நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஒவ்வொருவருக்குமே வாழ்நாளில் மறக்க முடியாத பருவம் என்றால் அது பள்ளிப் பருவம்தான். ஆனால் அந்தப் பள்ளிப் பருவத்தில் இருக்கும் போது, அதன் அருமை மாணவர்களுக்குத் தெரியாது. எப்போது பள்ளிக்கு விடுமுறை விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே மேலோங்கி இருக்கும்.
இப்போதும் அப்படித்தான், கோடை விடுமுறையை ஒரு மாதத்திற்கும் மேலாக அனுபவித்த பிறகும்கூட மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்றால் அவர்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் விடுமுறையை நீட்டிக்க மாட்டார்களா என்றே எதிர்பார்க்கிறார்கள் என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அதைக்கேட்டு மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என நகைச்சுவையாக எடுத்துக் கூறுகின்றன இந்த மீம்ஸ்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...























Click it and Unblock the Notifications