ஆந்திர கடற்கரை அருகே இன்று அதிகாலை 5 மணியளவில் நில அதிர்வு.. ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவு!
விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிரதேச கடற்கரை அருகே இன்று அதிகாலை 5 மணிக்கு, 4.5 ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு பதிவாகியுள்ளது. விசாகப்பட்டினம், அனகாபள்ளி, விஜயநகரம், காக்கிநாடா, கோனசீமா உள்ளிட்ட பகுதில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட நில அதிர்வு பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதிகாலை நேரத்தில் மக்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் மட்டுமன்றி, அதனைச் சுற்றியுள்ள அனகாபள்ளி, விஜயநகரம், காக்கிநாடா மற்றும் கோனசீமா உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் மற்றும் மாவட்டங்களிலும் இந்த நில அதிர்வு பரவலாக உணரப்பட்டுள்ளது.
நில அதிர்வு ஏற்பட்ட சில நொடிகள் வீடுகளில் அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது பாதிப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications