ஏழு கழுத வயசானாலும்.. திரும்ப ஸ்கூல் ரீஓப்பன்னு சொன்னாலே காய்ச்சல், வயிறுவலி வருதே!
சென்னை: கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட படியால், பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மனநிலை எப்படியெல்லாம் உள்ளது என நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
எவ்வளவு தான் விடுமுறை விட்டாலும், இந்த குழந்தைகளுக்கு அது போதுமானதாகவே இருப்பதில்லை. சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து மீண்டும் திங்கட்கிழமை பள்ளிக்குச் செல்வதென்றாலே அழுவார்கள்.. இதில், ஏறக்குறைய இரண்டு மாதம் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்குச் செல்வதென்றால் கேட்கவா வேண்டும்?
கடந்த வருடம் மாதிரி இந்த வருடமும் வெயிலின் உக்கிரத்தைக் காரணம் காட்டி, விடுமுறையை மேலும் சில நாட்கள் நீட்டிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் இருந்தார்கள். ஆனால், கோடை மழை அந்த எதிர்பார்ப்பில் நீரை ஊற்றி விட்டது. அரசும் அடுத்த வாரம், அதாவது ஜூன் 6ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.
சுமார் இரண்டு மாதமாக குட்டீஸ்களின் சுட்டித் தனத்தைச் சமாளித்த பெற்றோர், இந்த அறிவிப்பால் நிம்மதிப் பெருமூச்சு விட, 'அதுக்குள்ள லீவு முடிஞ்சிடுச்சா.. எல்லாக் கோட்டையும் அழிங்க.. திரும்ப முதல்ல இருந்து லீவு விடுங்க' என குழந்தைகள் கேட்பதுபோல், மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...


























Click it and Unblock the Notifications