வீட்டை கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்லாம் பழசு.. இப்போ இதையும் கூட சேர்த்துக்கோங்க!
மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதை வைத்து ஜாலியான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: பள்ளிகள் மீண்டும் திறந்து விட்டதே என மாணவர்கள் தான் பீல் பண்ணுகிறார்கள் என்றால், அவர்களைவிட பெற்றோர்களும், ஆசிரியர்களும் இன்னமும் ரொம்பவே பீல் பண்ணுகிறார்கள் என்பது அதிகம் பகிரப்பட்டு வரும் மீம்ஸ்களைப் பார்த்தாலே தெரிகிறது.

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறந்து விட்டன. ஊரடங்கிற்கு முன்பு ஏற்கனவே நேரடியாக பள்ளி சென்று வந்த பிள்ளைகளுக்கு இது ஒன்றும் அவ்வளவாக வித்தியாசமாக இல்லை.

ஆனால், ஊரடங்கால் ஆன்லைனிலேயே பள்ளிப் படிப்பைத் தொடங்கி, இப்போதுதான் முதன்முறையாக பள்ளியின் வாசலையே மிதிக்கும் குழந்தைகளுக்கு எல்லாமே புதுசுதான்.

சரி, அவர்கள் பள்ளிக்குச் செல்ல அழுகிறார்கள் என்றால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் இந்தப் பிள்ளைகளை இனி வருடம் முழுவதும் சமாளிக்க வேண்டுமே என ஆசிரியர்களும், 'இப்படி திடீரென கட்டணத்தை உயர்த்தி விட்டார்களே' என பெற்றோர்களும் ரொம்பத்தான் கவலையில் இருக்கிறார்கள் போலும். அவர்களது கவலைகளையெல்லாம் மீம்ஸ்களாகப் போட்டு சமூகவலைதளங்களில் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்து வருகின்றனர். இடையிடையே மானே, தேனே போல் மாணவர்கள் பற்றிய மீம்ஸ்களையும் பார்க்க முடிகிறது.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...













Click it and Unblock the Notifications