மூஞ்சிடா மூஞ்சி.. சிலபேரு மூஞ்சியப் பார்த்தாதான் அள்ளிக் கொடுக்கணும்னு தோணும்!
சென்னை: மைண்ட்வாய்ஸ் என நினைத்து சற்று சத்தமாக மனதில் உள்ள கஷ்டங்களை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
தெரிந்தவர், தெரியாதவர் என எல்லோரிடம் நம் மக்கள் பாராபட்சமின்றி பகிர்ந்து கொள்வது புலம்பலைத் தான். பேருந்து நிலையத்தில் நிற்கும்போதுகூட, அருகில் நிற்பவர் தெரியாதவராக இருந்தாலும், 'நாம எதிர்பார்க்கும்போதுதான் நாம் போக வேண்டிய பஸ் வராது... எல்லாம் நம்ம நேரம்ங்க' என கொஞ்சம்கூட தயங்காமல் புலம்புவார்கள்.
இப்போது செல்போனின் ஆதிக்கம் அதிகமாகி, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் மக்கள் பேசுவது குறைந்து விட்டதால், தங்கள் மனதில் உள்ளதை எல்லாம் சமூகவலைதளப் பக்கங்களில்தான் அதிக ம் பகிர்கின்றனர். அதுவும் மீம்ஸ்கள் அவர்கள் புலம்புவதற்கும், கலாய்ப்பதற்கும் நல்ல வசதியாக உள்ளது என்பதால், தங்கள் மனநிலைக்கு ஏற்ற மாதிரியானவற்றை அதில் பகிர்ந்து கொள்கின்றனர்.
இப்போதும் அப்படித்தான் மாதம் பிறந்து பாதி ஓடிவிட்டதால், கையில் காசில்லை என்பது உட்பட மனதில் உள்ள கஷ்டங்களை எல்லாம் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications