என்ன ஜென்மங்க இது.. மனசுல அவ்ளோ பிரச்சினைய வச்சுகிட்டு ரீல்ஸ் பார்த்துட்டு இருக்கு!
சென்னை: மாசக் கடைசியாகி விட்டதால், கையில் காசில்லாத விரக்தியில் தங்களது மன அழுத்தத்தை எல்லாம் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
'மனிதனின் மகிழ்ச்சியை பணம் தீர்மானிப்பதில்லை..' என என்னதான் தத்துவம் பேசினாலும், பணம் தான் இங்கு பலவற்றை தீர்மானிக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. வருமானத்தில் ஒரு பகுதியை சேமித்துக் கொண்டு, வயதானதும் ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதை மட்டுமே பெரும் லட்சியமாகவும் கொண்டு வாழ்ந்தவர்கள் நமக்கு முந்தைய தலைமுறையினர்.

ஆனால், நம் வாழ்க்கைமுறை இப்போது அப்படியில்லை.. வேலைக்கு சேர்ந்ததுமே கடன் வாங்கி இஎம்ஐயில் ஒரு வீட்டை வாங்கி விட்டு, பிறகு அதற்காகவே மாதம் மாதம் வேலைக்கு ஓடுகிறார்கள் இப்போது. அதனாலேயே மாதத்தில் சம்பளம் வாங்கும் ஒரு நாளுக்கு மட்டும்தான் அவர்களால் திட்டம் போட முடிகிறது. மற்ற நாளெல்லாம், 'கையில வாங்கினேன் பையில போடல.. காசு போன இடம் தெரியல' என பாடிக் கொண்டு திரிய வேண்டியதாக இருக்கிறது. அதிலும் மாசக்கடைசி வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.
இப்போதும் அப்படித்தான் கையில் காசில்லாத விரக்தியை, மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளங்களில். பணப் பிரச்சினையோடு கொஞ்சம் பணப்பிரச்சினை, மனப்பிரச்சினை என எல்லாவற்றையும் கலந்து கட்டி மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட மன அழுத்தம் பற்றிய சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...























Click it and Unblock the Notifications