என்ன ஆளாளுக்கு கம்பேக் கொடுக்குறாங்க.. நாமளும் ஒரு கம்பேக் கொடுத்தாதான் சரியா வரும்!
மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதையும், பள்ளிகள் திறக்கப்படுவதையும் சேர்த்து மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
சென்னை: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதை நினைத்து மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என நினைத்தால், அவர்கள் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதைப் பார்த்து குஷியாகி இருப்பதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மழையாகட்டும், வெயிலாகட்டும்.. அதன் தாக்கத்தைவிட அதனால் கிடைக்கும் விடுமுறையை நினைத்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைவதாகவே பெரும்பாலும் மீம்ஸ்கள் வைரலாகும். நிஜமாகவே மாணவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்களோ இல்லையோ, மீமர்களே அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக மீம்ஸ் போட ஆரம்பித்து விடுவார்கள்.
இப்போதும் அப்படித்தான், கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், நாட்டில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதை நினைத்து மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் சமூகவலைதளங்களில்.
ஏற்கனவே இந்தியா கொரோனாவால் மூன்று அலைகளைப் பார்த்துவிட்ட நிலையில், தற்போது மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவது நான்காவது அலைக்கு காரணமாகி விடுமோ என மக்கள் ஒரு பக்கம் அச்சத்தில் இருக்க, வழக்கம் போல் இதையும் மீம்ஸ் கண்டெண்ட்டாக்கி விட்டார்கள் மீமர்கள்.
இதோ அப்படியாக பகிரப்பட்டு வரும் ஜாலி மீம்ஸ்களில் சில உங்களுக்காக...