குளிர்காலத்துல சூடா குடிச்சீங்க சரி.. இப்போ கொளுத்துற வெயில்லயுமாடா டீ குடிப்பீங்க!
சென்னை : வெயில் கொஞ்சம் கொஞ்சமாக தன் வேலையைக் காட்டத் தொடங்கியுள்ள நிலையில், நெட்டிசன்களும் வெயிலை மீம்ஸ்களாகப் பகிர்ந்து வறுத்தெடுக்கத் தொடங்கி விட்டனர்.
முன்பெல்லாம் ஏப்ரல், மே மாதங்களை நினைத்து மட்டுமே வெயிலுக்கு பயந்தவர்கள், இப்போது பிப்ரவரி, மார்ச் மாதங்களிலேயே புலம்ப ஆரம்பித்து விட்டனர். அந்தளவுக்கு வெயில் நாளுக்கு நாள் தன் கோர முகத்தைக் காட்டி வருகிறது. இடையில் கொஞ்சம் கோடைமழை பூமியை குளிர வைத்தாலும், மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தன் வேலையை உக்கிரமாக ஆரம்பித்து விட்டது சூரியன்.

அதனாலேயே பகலில் வெளியில் செல்ல மட்டுமல்ல.. வீட்டிற்குள் இருக்கவுமே மக்கள் புலம்புகின்றனர். இந்த கொளுத்தும் வெயிலுக்கு குளுகுளுவென ஏதாவது குடிக்கலாமா என்றுதான் பெரும்பாலான மக்களின் மனது விரும்பும். ஆனால், அவர்களிலும் சில வித்தியாச விரும்பிகள், 'சூடா ஒரு டீ குடிப்போமா' என கேட்கும் போது, 'என்ன மனுசன்யா நீயெல்லாம்' என்றுதான் சொல்லத் தோன்றும்.
இதைத்தான் தற்போது மீம்ஸ்களாக சமூகவலைதளப் பக்கங்களில் புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள். 'குளிர்காலத்துல சூடா குடிச்சீங்க சரி.. இப்போ வெயில் கொளுத்துது.. இப்பயுமாடா டீ குடிப்பீங்க!' என டீ பிரியர்களை மீம்ஸ்களாக வறுத்தெடுத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications