கறி சாப்பிடுபவர்கள் எனக்கும் சிறிது அனுப்பிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!
ஞாயிறு பற்றிய ஸ்பெஷல் மீம்ஸ்களால் நிரம்பிக் கிடக்கின்றன சமூகவலைதளப் பக்கங்கள்.
சென்னை: ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக வழக்கம்போலவே, கறிக்குழம்பு, பிரியாணி மீம்ஸ்களால் கமகமத்துக் கிடக்கின்றன சமூகவலைதளப் பக்கங்கள்.

ஞாயிற்றுக்கிழமை என்றாலே நிச்சயம் வீட்டில் கறிக்குழம்பு இருக்க வேண்டும் என்பது அசைவ உணவுப் பிரியர்களின் எழுதப்படாத விதி. ஆனால், ஏதாவது ஒரு சில காரணங்களால் அன்று அசைவம் எடுக்கப்படவில்லை என்றால், மீம்ஸ்களாக சமூகவலைதளங்களில், 'என் சோகக் கதையக் கேளு தாய்க்குலமே.. அம்மா தாய்க்குலமே..' என புலம்பித் தீர்த்து விடுவார்கள்.

சரி, அசைவம் சாப்பிடாதவர்கள்தான் புலம்புகிறார்கள் என்றால், வயிறும், மனதும் நிறைய திருப்தியாகச் சாப்பிட்டவர்கள், 'ஞாயிறு அதற்குள் முடிந்து விட்டதே..' என தங்கள் பங்கிற்கு சமூகவலைதளங்களில் புலம்புகிறார்கள்.

இப்படியாக வழக்கம் போலவே, இந்த ஞாயிறும் சமூகவலைதளங்களில் சன்டே ஸ்பெஷல் மீம்ஸ்களால் நிரம்பித்தான் கிடக்கிறது.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக..


















Click it and Unblock the Notifications