“இனி இந்தப் பயலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல”.. ஜெயிச்சா மட்டும் கலாய்க்காம விட்ருவோமா!
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஜெயித்தவர்கள் மற்றும் தோல்வியடைந்தவர்களை வைத்து சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் கலாய்த்து சமூகவலைதளங்களில் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே திருவிழா மாதிரி, அரசியல் கட்சியினருக்கும், மக்களுக்கும் கொண்டாட்டமாகி விட்டது. சோப்பு போட்டு, காய்கறி நறுக்கிக் கொடுத்து, டீ ஆற்றிக் கொடுத்து, கறி வெட்டிக் கொடுத்து, காலில் விழுந்து என தங்களால் என்னென்ன செய்ய முடியுமோ அந்தளவுக்கு இறங்கி வந்து வாக்கு சேகரித்தார்கள். அப்போதே அவர்கள் வாக்கு சேகரித்ததை வைத்து விதவிதமாக மீம்ஸ்களாக வெளியிட்டு கலாய்த்து வந்தனர்
இப்போது தேர்தல் முடிவுகள் வந்து, யார் யார் கவுன்சிலர் ஆகி இருக்கிறார்கள் என்பது தெரிந்து விட்டது. ஆனாலும் இவர்களை மீமர்கள் விடுவதாக இல்லை. தேர்தலில் தோற்றவர்கள், ஜெயித்தவர்கள் என வேறுபாடு காட்டாமல், ஜாலியாக மீம்ஸ் போட்டு இந்தத் தேர்தல் திருவிழாவைக் கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...


















Click it and Unblock the Notifications