அன்னையிடம் அன்பை வாங்கலாம்.. அப்டியே மனைவியிடம் அடியை வாங்கலாம்னு சொல்லி இருக்கலாம்ல!
சென்னை: வெள்ளிக்கிழமை மாலையாகி விட்டது, அடுத்து சனி, ஞாயிறு விடுமுறையை நினைத்து குதூகலமாக இருப்பார்கள் என நினைத்தால், நம் நெட்டிசன்கள் மனைவிகளைப் பற்றி மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
'என்னதான் குடும்பத்தலைவர் என வெளியில் பீற்றிக் கொண்டாலும், வீட்டுக்குள் நடப்பது என்னவோ அல்லி ராஜ்ஜியம்தான்' என்பதுதான் திருமணமான பல ஆண்களின் குற்றச்சாட்டு. ஆனால் மனைவிகளிடம் கணவர்களைப் பற்றிக் கேட்டால், அவர்கள் ஒரு புத்தகமே போடும் அளவிற்கு புகார்களை அடுக்குவார்கள்.. அது வேறு கதை.

ஆனால் பொதுவெளியில் எப்போதுமே மனைவிகள் கணவர்மார்களைக் கொடுமைப்படுத்துவதாக மீம்ஸ்களைப் பகிர்வதுதான் எப்போதுமே டிரெண்டிங்கில் இருக்கும். இப்போதும் அப்படித்தான் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை என சந்தோசப்படாமல், மனைவியிடம் அடி வாங்கப் போவதை நினைத்து பீல் பண்ணி மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் இந்தக் குறும்புக்கார நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications