அரிசி மூட்டையில ஒட்டுனமாதிரி தண்ணியில ஒட்ட ஸ்டிக்கர் தேடிகிட்டு இருந்தாங்கலாம்
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர் மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை பறித்து அதில் அதிமுகவினர் அம்மா ஸ்டிக்கர்களை ஒட்டியது பற்றி தான் மக்கள் இன்னும் ஃபேஸ்புக்கில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர் மக்களுக்கு ஏராளமான பிரபலங்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கினர். அந்த நிவாரணப் பொருட்களை அதிமுகவினர் பறித்து அவற்றில் அம்மா ஸ்டிக்கர்களை ஒட்டினர்.
அம்மா ஸ்டிக்கர் ஒட்டிய அதிமுகவினர் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் அதை பலரும் ஃபேஸ்புக்கில் கிண்டல் செய்தும் வருகிறார்கள்.

மோடி
முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியிடம் அவர் தமிழகத்திற்கு வெள்ளநிவாரணமாக அளித்த ரூ.1940 கோடியும் ஸ்டிக்கர் அடிக்கவே சரியாக இருந்தது என்று கிண்டல் செய்துள்ளனர் மக்கள்.

ஸ்டிக்கர்
சப்போஸ் சென்னையில் மறுபடியும் வெள்ளம் வந்து மக்கள் கஷ்டப்பட்டாங்கன்னா உடனே நிவாரணம் பண்ணுவீங்களா இல்ல ஸ்டிக்கர் ஒட்டி சாவடிப்பீங்களா.

தண்ணீர்
அரிசி மூட்டையில ஒட்டுனமாதிரி தண்ணியில ஒட்ட ஸ்டிக்கர் தேடிகிட்டு இருந்தாங்கலாம். அதான் ஏரியில தண்ணி திறந்துவிட லேட்டாயிடிச்சி

ஏரிய
அம்மா சொல்லல அதானால நாங்க ஏரிய முன்னாடியே திறக்கல

பழக்கதோஷம்
பழக்கதோஷத்துல நிவாரண தொகைய இப்படி குடுத்துடாதீங்கப்பா!












Click it and Unblock the Notifications