எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா?.. சமூக வலைதளங்களில் வெளுக்கும் மக்கள்!
பெண்கள் மீது தாக்குதல் நடத்திய திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜனை கடுமையாக கண்டித்து மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
திருப்பூர்: மதுக்கடைக்கு எதிராக திருப்பூர் சாமளாபுரத்தில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் நேற்று சரமாரி தடியடி நடத்தினர். இதில் பலர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
பெண்கள் என்றும் பாராமல் திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியரான் தடியால் விரட்டி விரட்டியடித்தார். பெண் ஒருவரை அவர் ஓங்கி அறைந்ததில் அந்த பெண்ணுக்கு கேட்கும் திறன் பறிபோயுள்ளது.
இந்நிலையில் ஏடிஎஸ்பி பாண்டியராஜனை கண்டித்து சமூக வலைதளங்களில்.ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. மிக கடுமையான வார்த்தைகளால் அவரை திட்டி வருகின்றன. நாகரிகம் கருதி அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
இவரோட விசுவாசத்தை பார்க்கும்போது..
இவரோட விசுவாசத்தை பார்க்கும்போது இவரையே நாங்க டாஸ்மாக் சேல்ஸ் பர்சன் அப்புறம், அடிசனல் ரோலா டாஸ்மாக் வாட்ச்மேனா போட்டா டாஸ்மாக், எங்க ஆல்கஹால் பேக்டரி பாதுகாக்கப்படும் தம்பி!!
கண்ணியம் மறந்த காக்கியே..
கண்ணியம் மறந்த காக்கியே ஒன்றை நினைவில் கொள், நீ அடிக்க நாங்கள் கோழை அல்ல நாங்கள் திருப்பி அடிக்க நீங்கள் வீரர்கள் இல்லை... என்கிறது இந்த மீம்...
தகுதியில்லாத போலீஸ்க்கு..
தகுதியில்லாத போலீஸ்க்கு எப்படி பொதுமக்கள் யார் கிரிமினல் யார்னு தெரியும்.. ஏடிஎஸ்பி பாண்டியராஜன் போலிஸ்க்கான தகுதியில்லாதவர் என சொல்லாமல் சொல்கிறது இந்த மீம்...
எடிட்டிங் பண்ணினதுன்னு...
இப்போ பாருங்க இவர் காவல்துறையிலேயே இல்லைன்னு சொல்ல சொல்லுவாங்க... இல்லைன்னா இந்த வீடியோ எடிட்டிங் பண்ணினதுன்னு ஏதாவது சாக்கு போக்கு சொல்லுவாங்க பாருங்க..!!!
எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா?
மக்களுக்கு பாதுகாப்பு குடுக்க வேண்டிய காவல்துறை செய்யுற வேலையா இது? பெண்களை இப்படி கண்மூடி தனமா அடிக்குறதுக்கா உங்களுக்கு அரசாங்கம் சம்பளம் கொடுக்குது... இதெல்லாம் எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா?
அரசாங்கம் மது விற்கிறதே அசிங்கம்
அரசாங்கம் மது விற்கிறதே அசிங்கம் அதை காப்பாற்ற பெண்களை அடிக்கறீங்களே என்னைக்காவது பலகோடி ஏமாத்துனவனுக்கு எதிரா கை ஓங்கியிருக்கிங்களா என கேட்கிறது இந்த மீம்...
போராட்டம் பண்ண மாட்டீங்களா??
இந்த பிரச்சனைக்கு எல்லாம் போராட்டம் பண்ண மாட்டீங்களா??? இல்ல சார் சிம்பு ஏதாவது பாட்டு பாடினாதான் பண்ணுவோம்...!!