இதுக்குதான் விளையாட வர மாட்டேன்னு சொன்னேன்.. பாவமாக தோற்ற பாகிஸ்தான்! பங்கமாக கலாய்த்த நெட்டிசன்கள்
சென்னை: டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் மோசமாக தோற்றிருக்கிறது. இந்த ஒரு தோல்வியால் மட்டும் அந்த அணி 3வது இடத்திற்கு சரிந்திருக்கிறது. அணியின் விளையாட்டு மோசமாக இருந்ததாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றன. சோஷியல் மீடீயாக்களில் பாகிஸ்தானை கலாயத்து மீம்ஸ்கள் பரவலாக ஷேராகி வருகின்றன.
கொழும்பின் ஆர். பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், இந்திய அணியிடம் பாகிஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அதிரடியாக ஆடி 176 ரன்களை குவித்திருந்தது. இது எளிதான இலக்குதான். சரியாக பிளான் செய்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் பாகிஸ்தான் அணி கடுமையாக சொதப்பியது.

18 ஓவர்களில் மொத்த விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 114 ரன்களை மட்டுமே குவித்தது. இந்த தோல்வி பாகிஸ்தானின் சூப்பர் 8 தகுதி வாய்ப்புகளை ஆபத்தில் தள்ளியுள்ளது.

இந்த தோல்வி பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ரசிகர்கள் பலர் தங்கள் வீடுகளிலிருந்த டிவிகளை போட்டு உடைத்திருக்கிறார்கள்.

குறிப்பாக பாகிஸ்தானி அணியின் கிங் என்று அழைக்கப்படும் பாபர் அசாம் மீது எக்கச்சக்க விமர்சனங்கள் குவிந்துள்ளன. முதலில் அவரை கிங் என்று அழைப்பதை நிப்பாட்ட வேண்டும் என்று பாக் ரசிகர்கள் டென்ஷன் ஆகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications