இது என்னங்க.. புது புரளியா இருக்கு!
சென்னை: தமிழகம் முழுவதும், ஆடி மாதத்தின் ஆரம்பத்துடன் சற்று தனித்துவமான பாரம்பரியங்கள் தொடங்குகின்றன. குறிப்பாக புதுமண தம்பதிகளுக்கு இது ஒரு முக்கியமான கட்டமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில், பெண் தாய்வீட்டிற்கு அழைத்து செல்லப்படும் நடைமுறை இன்று வரை பல குடும்பங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.
இதன் பின்னணியில் ஆன்மீக காரணங்களும், குடும்ப வழக்கங்களும் அடங்கியுள்ளன. ஆடி மாதம் முழுக்க திருமணத்திற்கும், உறவுகளின் சங்கமத்திற்கும் இடைவெளி வைக்கப்படுவது வழக்கம். இது சிலருக்கு பாசமும், சிலருக்கு பசப்புமாகவே அமைகிறது.

புது மாப்பிள்ளைகள் கவலையின் உச்சத்தில் இருப்பாங்க, பழைய மாப்பிள்ளைகள் இப்போ கூட்டிட்டு போங்கடா என கெஞ்சுற நிலையில் இருப்பாங்க. அதாவது புது மண தம்பதிகளை பிரித்து வைத்து பெண்ணை அவளது வீட்டிற்கு 1 மாதம் அழைத்து செல்வதே இந்த ஆடி மாதத்தின் சிறப்பாகும். ஆனால் இந்த நாட்களில் ஆண்கள் படும் தவிப்பை பார்க்கவே முடியாது.
திருமணம் முடிந்ததும் நமக்கென ஒருத்தி என்று தொடங்குவதற்குள் ஆடி மாதம் பலரின் வாழ்க்கையில் கதகளி ஆடி விடுகிறது. சமூக ஊடகங்களிலும், 'ஆடி பிரிவு' பற்றிய அனுபவங்கள் மீம்ஸ்கள், அனுபவப் பதிவுகள் வழியாக வெளிப்படுவதை பார்க்கலாம். அவற்றில் சில உங்களுக்காக இந்த பதிவில் பார்க்கலாம்.



















Click it and Unblock the Notifications