அப்புறம் தம்பி.. புரட்டாசி பொறந்துருச்சுல்ல!!
சென்னை: புரட்டாசி மாதம் தமிழ்க் காலண்டரில் ஆறாவது மாதமாகும். இது பொதுவாக செப்டம்பர் முதல் அக்டோபர் வரை வரும். பலர் இந்த மாதம் முழுவதும் சைவ உணவு மட்டும் உண்ணும் பழக்கத்தையும் பின்பற்றுகிறார்கள். புரட்டாசியில் திருமாலை வழிபட்டால் குடும்ப நலமும், செல்வ வளமும் அதிகரிக்கும் என்று மக்கள் நம்பிக்கை உள்ளது.
இளம் தலைமுறையினருக்கும் இது ஒரு விதி போலத்தான் இருக்கும். சிலருக்கு சைவம் பிடிக்காமல் இருந்தாலும், வீட்டாரின் அழுத்தத்தால் விரதத்தில் பங்கேற்க நேரிடும். ஆனாலும் குடும்பத்தோடு சேர்ந்து இருப்பதற்காகவே அந்த பழக்கத்தைப் பின்பற்றுவார்கள்.
சிலர் மட்டும் கொஞ்சம் வேற மாதிரி நடக்கிறார்கள். வீட்டில் சைவம் மட்டும் தான் சாப்பிடுவதாகக் காட்டி, வெளியே போகும்போது நண்பர்களோடு சேர்ந்து அசைவம் சாப்பிட்டு விட்டு, எதுவும் தெரியாதவர்கள் போல வந்து கலந்து கொள்வார்கள். இது குடும்பங்களுக்கு தெரியாமல் நடப்பதால், ஒரு வித நகைச்சுவையான அனுபவமாகவே மாறி விடுகிறது.

இப்போதான் சமூக வலைத்தளங்களில் "ஆடு, கோழி குஷியா இருக்குற மாதிரி" மீம்ஸ்களும், நான் வெஜ் பிரியர்கள் ஒரு மாதம் சோகத்தில் இருப்பது போலவும் கலாய்ப்புகளும் பக்கத்துக்கு பக்கம் வைரலாக ஆரம்பித்துவிடும். அதுவும் இளம் தலைமுறையினருக்கு புரட்டாசி வந்தா ஏற்படும் சோகம் தான் அதிக மீம்ஸ் கன்டென்ட்டாக மாறும். உங்க நண்பர்கள் யாராவது புரட்டாசி விரதம் இருந்தால் இந்த மீம்ஸ் ஷேர் பண்ணிவிடுங்க...




















Click it and Unblock the Notifications