வாழ்க்கைலாம் நல்லாதான் போகுது.. நாந்தான் போனை நோண்டிட்டே நாசமா போயிட்டு இருக்கேன்!
சென்னை : போனை நோண்டிக் கொண்டே இருப்பதால் வாழ்க்கை நாசமாவதாக நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
வாரத்தில் ஒரு நாளாவது ஏதாவது புலம்பல் மீம்ஸ்களைப் பகிர்ந்தால்தான், நம் நெட்டிசன்களுக்கு நிம்மதியாகவே இருக்கும். ஒன்று பணக்கவலை அல்லது மனக்கவலை.. இதுதான் பெரும்பாலும் நெட்டிசன்களின் புலம்பலுக்கு காரணமாக இருக்கும். சமயங்களில் பணக்கவலையால்தான் மனக்கவலையே வருகிறது என தத்துவ மீம்ஸ்களையும் பகிர்வார்கள்.
அந்தவகையில் இன்று, வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி மீம்ஸ்களைப் பகிர்ந்து புலம்பி வருகின்றனர். "எங்க போனாலும் கூடவே வருது மாமா பிரச்சினை" என்பதில் ஆரம்பித்து, "வாழ்க்கைலாம் நல்லாதான் போகுது.. நாந்தான் போனை நோண்டிக்கிட்டே நாசமா போயிட்டு இருக்கேன்!" என தங்களைத் தாங்களே நொந்து கொண்டு மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications