‘சென்னைக்கு மிக அருகில்’.. எங்க இப்போ அந்த வார்த்தைய சொல்லுங்க பார்க்கலாம்!
சென்னை : புயல் கரையைக் கடந்து விட்டாலும், அது தந்த மழையால் இன்னும் மக்கள் அவதிப்பட்டு வருவது போல, நெட்டிசன்களும் இணையத்தில் மழை மீம்ஸ்களைப் பொழிந்து வருகின்றனர்.
மிக்ஜாங் புயலும், அது சென்னையில் ஏற்பட்ட பாதிப்பும் வார்த்தைகளில் சொல்ல முடியாதது. மழை நீர் இன்னமும் பல இடங்களில் தேங்கி இருப்பது மாதிரியே, மக்களும் வெள்ளம் தந்த பிரச்சினைகளில் இருந்து முழுமையாக இன்னும் மீளவில்லை.

இந்த நேரத்தில், புண் பட்ட மனதை மீம்ஸ் போட்டு ஆற்று, என விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளங்களில். இப்போது வந்த வெள்ளம் பெரியதா? அல்லது 2015ல் வந்த வெள்ளம் பெரியதா? என்ற விவாதங்களோடு, சென்னையில் ஏரி இல்லை, இப்போது சென்னையே ஏரியில் தான் உள்ளது' என்பது மாதிரியான யதார்த்தங்களையும் ரசிக்கும்படியான மீம்ஸ்களாக்கி பகிர்ந்து வருகின்றனர்.
வட மாவட்டங்களைத் தொடர்ந்து, தற்போது தென் மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருவதால், இந்த மீம்ஸ்கள் இப்போது சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications