அவனே பாவப்பட்டு ஏதாவது காசு தருவான்.. நீ நொய்யி நொய்யினு புலம்பிட்டு இருக்காம கால் கனெக்ட் பண்ணு!
சென்னை : மாதக்கடைசி என்றாலே வழக்கமாக 25 தேதிக்கு மேல்தான் நம் நெட்டிசன்கள் புலம்ப ஆரம்பிப்பார்கள். ஆனால் இந்த மாதம், நாட்கள் கம்மி என்பதாலோ என்னவோ இப்போதே பணத்தை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து புலம்ப ஆரம்பித்து விட்டனர்.
பணம்தான் இப்போது எல்லாவற்றிற்கும் பிரதானமாக இருக்கிறது. முன்பெல்லாம் குணத்தைக் கொண்டாடியவர்கள்கூட, இப்போதெல்லாம் பணம் இருப்பவர்களைத்தான் கொண்டாடுகிறார்கள். என்னதான் வெற்றுக் காகிதம் என பணத்தை திட்டினாலும், இப்போது அதைத் தேடி, அதன் பின்னே ஓடுபவர்கள்தான் அதிகம்.
என்ன.. புலம்பல் கொஞ்சம் ஓவராக இருக்கிறதே என நினைக்கிறீர்களா? மாதக் கடைசி ஆகி விட்டாலே நம்மில் பலர் இப்படித்தான் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஓவராக புலம்பத் தொடங்கி விடுவார்கள். அதுவும் இந்த மாதம் மற்ற மாதங்களைவிட நாட்கள் கம்மி, சீக்கிரம் சம்பளம் வரும் என எதிர்பார்த்திருந்தால், அதற்கு நேர் எதிராக, சீக்கிரம் கையில் இருந்த பணம் காலியாகி விட்டது போல. அதனால்தான் இந்த மாதம் இப்போதே பணத்தை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து புலம்ப ஆரம்பித்து விட்டனர் நம் மக்கள்.
"சிறுதுளி பெருவெள்ளம் என்பதெல்லாம் பழைய பழமொழி.. சிறு சிறு இஎம்ஐ பின்னர் பெருங்கடன்" என்பதில் ஆரம்பித்து, "கையில இருக்கறதை வச்சு சந்தோசமா இருனு எல்லோரும் அட்வைஸ் பண்றாங்க.. ஆனா நம்ம கிட்ட இருக்கறது எல்லாம் கடனும், கஷ்டமும்தான்.. இதை வச்சி எப்டி சந்தோசமா இருக்கிறது" என்பது வரை விதவிதமாய், ரகரகமாய் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக....





















Click it and Unblock the Notifications