வட்டு கருப்பட்டிய... வாசமுள்ள ரோசாவ.. மீம்ஸ் போட்டு அழுது புலம்பும் சிஎஸ்கே பேன்ஸ்.. !
சென்னை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியுற்றதால் ரசிகர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் 7 போட்டிகளில் நடந்த சேஸிங்கில் இதுவரை இரு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்த நிலையில் சென்னை அணியின் நேற்றைய ஆட்டம் ரசிகர்களை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது. இதுகுறித்து ரசிகர்கள் வெளியிட்ட ட்வீட்களை பார்ப்போம்.
அடடா.. ஒரு ஓட்டையை அடைப்பதற்குள் அடுத்தடுத்து ஓட்டை விழுந்தா என்ன பண்றது.. தோனியின் புலம்பல்!
— PREMGI (@Premgiamaren) October 10, 2020
சிஎஸ்கே அணி
சென்னை சிஎஸ்கே அணி படுதோல்வியுற்றதால் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர். இதுகுறித்து நடிகர் பிரேம்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை படத்தில் ரஜினி அழும் படத்தை போட்டு வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
ஜாதவ்
பழி போட ஜாதவ் கூட இல்லையே #CSKvRCB என்கிறார் இந்த வலைஞர்.
இத்தனை வருஷம்
என்ன தம்பி ஃபீல் பண்றீங்களா, இத்தனை வருஷமா நாங்களும் இப்படித்தான் ஃபீல் பண்ணிட்டு இருந்தோம் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கூறுவது போல் கூறுகிறார் இந்த வலைஞர்.
சந்தானம்
ஜாதவ்: அடுத்த மேட்ச் நமக்கு யார் கூட? என கேட்பது போல் சந்தானம், ஜீவா நடித்த படத்தின் சீனை போட்டுள்ளார் இந்த வலைஞர்.
ஜாதவ்வா இருக்காங்க
ஒரு ஜாதவ் இருந்தாலே முடியாது, ஆனா இங்க எல்லாருமே ஜாதவ் வ இருந்தா என்ன பண்றது என்கிறார் இந்த வலைஞர்.
வாசமுள்ள ரோசாவ
வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ என வடிவேல் மீம்ஸ் போட்டு அவர் அழுவது போல் புகைப்படம் போட்டுள்ளார் இந்த வலைஞர்.
சென்னை அணி
தான் சரியாக விளையாடவில்லை என கூறி தன்னை அணியிலிருந்து நீக்கியும் சென்னை அணி தோற்றுவிட்டதே என்கிறார் இந்த வலைஞர்.