2 தனிப்படைகள் கருணாஸை கைது செய்தாயிற்று... எச் ராஜாவை தேடிச் சென்ற 3 தனிப்படைகள் என்னவாயின?
சென்னை: கருணாஸ் கைது செய்யப்பட்டது தொடர்பாக நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மற்றும் காவல் துறைக்கு எதிராக கருணாஸ் பேசியதை தொடர்ந்து அவர் இன்று கைது செய்யப்பட்டார். எனினும் ஹைகோர்ட்டுக்கு எதிராக பேசிய எச் ராஜா இன்னும் கைது செய்யப்படாதது குறித்து நெட்டிசன்கள் தெரிவித்தனர்.
|
ஜெ அன்பழகன் டுவீட்
கருணாஸ் மன்னிப்பு கேட்டப்பின் அவரது மீது கைது நடவடிக்கை ஏன்?
காவல்துறை மீதும் நீதித்துறை மீதும் கடும் விமர்சனங்களை வைத்த @HRajaBJPவை கைது செய்யவில்லை. பெண் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசிய @SVESHEKHER யை நீதிமன்றமே கைது சொன்னபோதும் , அவரை கைது செய்யவில்லை என்று திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தெரிவித்தார்.
|
பாஜக நிர்வாகிகள்
கருணாஸ் எம்எல்ஏ, ஆனால் எச் ராஜாவோ எம்எல்ஏ கூட இல்லை. இருவரும் வெறுக்கத்தக்க பேச்சை காவல் துறை, தமிழக ஹைகோர்ட் மற்றும் முதல்வருக்கு எதிராக பேசினார்கள். கருணாஸ் கைது செய்யப்பட்டுவிட்டார், ஆனால் பாஜக நிர்வாகிகளோ என்ன பேசினாலும் அந்த விவகாரத்தில் இருந்து தப்பிப்பதோடு ஜாலியாக சுற்றி வருகின்றனர்.
|
விபி கலைராஜன் கேள்வி
தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டபின்பும், சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அவர்களை கைது செய்த தமிழக அரசு, தொடர்ந்து மதகலவரங்களை தூண்டும் விதமாகவும், காவல்துறை, நீதிமன்றங்களை இழிவுபடுத்தும் விதமாகவும் பேசிவரும் H.ராஜாவை இதுவரை கைது செய்யாதது ஏன் ? என்று வி.பி. கலைராஜன் தெரிவித்தார்.
|
ஒழுங்கு
தமிழகத்தில் இரு வகையான சட்டம்- ஒழுங்கு உள்ளது. ஒன்று, பாஜகவினர், ஆளும் கட்சிக்கானது, இன்னொன்று மற்ற அப்பாவி தமிழ் மக்களுக்கானது. தமிழக அரசின் இரட்டை நிலைப்பாட்டுக்கு சிறந்த உதாரணம் கருணாஸ் கைதும் எச் ராஜா கைது செய்யப்படாததும் ஆகும்.
|
3 தனிப்படைகள் என்னவாயிற்று
கருணாஸை கைது செய்ததன் மூலம் தமிழக அரசு இறுதி நடவடிக்கையை எடுத்து காண்பித்துவிட்டது. என்னுடைய சந்தேகம் எல்லாம் கருணாஸை பிடிக்க 2 தனிப்படைகள் சென்றது , அவை அவரை கைது செய்துவிட்டன. ஆனால் எச் ராஜாவை பிடிக்க சென்ற 3 தனிப்படைகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன. 2 பெரியதா, 3 பெரியதா.
|
இதுவரை ராஜா கைது இல்லை
தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்ட பின்பும், சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அவர்களை கைது செய்த தமிழக அரசு, தொடர்ந்து மதகலவரங்களை தூண்டும் விதமாகவும், காவல்துறை, நீதிமன்றங்களை இழிவுபடுத்தும் விதமாகவும் பேசிவரும் H.ராஜாவை இதுவரை கைது செய்யாதது ஏன்?
|
எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்
எச் ராஜா சட்டத்துக்கு அப்பாற்பட்டவர். கருணாஸ் கைது செய்யப்பட்டது நல்லதுதான். ஒரு கட்சியையும் தொண்டர்களையும் வழிநடத்தும் தலைவர்களாக மட்டும் இருக்காது. விதிமுறைகள் மற்றும் சட்டத்தை பின்பற்றி மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!












Click it and Unblock the Notifications