For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரிய வச்சுக்க அம்மாவ கொடுன்னு சொன்னவாய்தானே உண்ணாவிரதம் இருக்கு: நெட்டிசன்ஸ் அதகளம்

அதிமுகவினர் உண்ணாவிரதம் குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவினர் உண்ணாவிரதம் குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் அதிமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். ஆளுங்கட்சியின் இந்த உண்ணாவிரதத்தை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அம்மாவ கொடு

காவிரிய வச்சுக்க அம்மாவ கொடுன்னு சொன்னவாய்தான உண்ணாவிரதம் இருக்கு..

செய்வீர்களா?

அதிமுக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறிக்கொண்டு முதல்வர் முதலானோர் உண்ணாவிரதம் இருக்கிறார்களாம். வெறும் கண் துடைப்பு நாடகம்.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கிறோம் என்று வெளிப்படையாகக் கூறுங்கள். அதுதான் நிஜமான அழுத்தம். செய்வீர்களா?

மிகக்கொடுமை யாதெனில்

பசியை விட மிகக் கொடுமை யாதெனில் -
ஓயாமல் வருபவர்களைத் தொடர்ந்து கும்பிடுவது ஆகும்.

காலக்கொடுமைடா கதிர்வேளா

தெய்வத்துகிட்ட மணி அடிக்கிற பூசாரியே உண்ணாவிரதம் இருந்தா எப்படி அமைச்சரே!?
ஒரு வேளை தற்காலிகமா அந்த பொருப்பை நம்ப ஆளுநர் பண்றாரோ...
காலக் கொடுமைடா கதிர்வேளா..
எப்படியோ தமிழ் நாட்டுக்கு தண்ணி வருவதற்கு ஏற்பாடு செய்தால் சந்தோஷம்

ஒரே மாநிலம் தமிழ்நாடு

ஆளுங்கட்சி உண்ணாவிரதம் இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு என்றால் அது மிகையல்ல

English summary
Netizens making fun of ADMK hunger strike. ADMK keeps hunger strike on the Cauvery issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X