நீ யாருக்கும் கடன் கொடுத்து ஏமாறாத.. வங்கிகளை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
வங்கிகளில் கடன் பெற்றுக்கொண்டு தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு எஸ்கேப்பாகி வரும் நிலையில் வங்கிகளை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
Recommended Video
சென்னை வங்கிகளில் கடன் பெற்றுக்கொண்டு தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு எஸ்கேப்பாகி வரும் நிலையில் வங்கிகளை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
வைர வியாபாரியான நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டார்.
இதேபோல் விஜய் மல்லையாவும் பல ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் பெற்று வெளிநாட்டில் பதுங்கியுள்ளார். இந்நிலையில் வங்கிகள் தொழிலதிபர்களுக்கு கடன் கொடுத்து ஏமாறுவதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
ஏமாறாதீர்கள்
யாரிடமும் ஏடிஎம் பின் கொடுத்து ஏமாறாதீர்கள்ன்னு பேங்க்லேருந்து எஸ்எம்எஸ் அனுப்புவதை கலாய்த்து இந்த மீம் வெளியிடப்பட்டுள்ளது. என்கிறது இந்த மீம்
|
பெனால்டி போட்டே டேலி
ஆனா, எஸ்பிஐ பேங்க் ஒரு தீர்கத்தரசி. கடன் வாங்குனவன் திருப்பி கொடுக்க மாட்டான்னு முன்னமே தெரிஞ்சு, கஷ்டமருக்கு பெனால்டி போட்டே டேலி பண்ணிக்கிட்டான் போல..!! என்கிறது இந்த டிவிட்
|
கடனா சார் கொடுக்க போறாங்க
என்ன சார் பேங்க் பக்கம், என்ன வேலை!?
நமக்கெல்லாம் கடனா சார் கொடுக்க போறாங்க, பணம் எடுக்கலாம்னு வந்தேன் சார்!! என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்
|
அயல்நாட்டுக்கு அனுப்பி வைப்போம்
பேங்க் லோன் : ஆடி ஆஃபர்.
இங்கு லோன் வாங்கினால் வார செலவுக்கு காசு கொடுத்து அயல்நாட்டுக்கு அனுப்பி வைப்போம்.. என்கிறார் இந்த வலைஞர்
|
ஓடாம என்ன பண்ணுவாங்க
ஏன்யா...இந்த லட்சணத்தில பேங்க் நடத்துன்னா அவிய்யிங்க துட்ட வாங்கி ஏமாத்திட்டு வெளிநாட்டுக்கு ஓடாம என்ன பண்ணுவாங்க.. என்கிறார் இந்த நெட்டிசன்
|
ஓடாம என்ன பண்ணுவாங்க
பேங்க் காரன் இவ்வளவு புத்திசாலித்தனமா இருந்தா... பணத்த சுறிட்டு ஓடாம என்ன பண்ணுவாங்க.. என்கிறார் இந்த வலைஞர்
|
எப்ப திரும்பி வருவே?
தொழில் சம்பந்தமாக வெளிநாட்டில் இருப்பதால் வங்கி கடன் தொடர்பாக எதுவும் செய்ய முடியவில்லை - நீரவ் மோடி
பேங்க் : எப்பய்யா கடன கட்டுவே?
நீரவ் : திரும்பி வரும் போது கட்டுவேன்
பேங்க் : எப்ப திரும்பி வருவே?
நீரவ் : பணம் கட்டும் போது திரும்பி வருவேன்.. என கிண்டலடிக்கிறது இந்த டிவிட்
|
மிச்சம் வச்சுட்டு போனது
PNB ஓனர் : இங்க இருந்த நம்ம பேங்க் பில்டிங் எங்கடா?
PNB மேனேஜர் : நீரவ் மோடி மிச்சம் வச்சுட்டு போனது இவ்வளவு தான் சார்.. என கலாய்க்கிறது இந்த டிவிட்
|
என்னடா வாழ்க்கை
2000 கோடி ரூபாய் மக்கள் பணத்தை பேங்கில் திருடி சென்று வெளிநாட்டியில் சொகுசாக வாழ்கிறான் நீரவ் மோடி...ஆனால் பசி காக 200ரூபாய் திருடிய அப்பாவி மனநிலை பாதித்த வாலிபரை அநியாயமாக கொன்றுவிட்டார்களே...என்னடா சமூகம் இது... என்கிறார் இந்த நெட்டிசன்