For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது விஜயேந்திரருக்கு தெரியுமா...? நெட்டிசன்ஸ் குசும்பு

தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததாலேயே அவர் எழுந்து நிற்கவில்லை என சங்கர மடம் விளக்கம் அளித்திருப்பதை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழ் தாய் வாழ்த்துக்கு மரியாதை தராமல் அவமதித்த விஜயேந்திரர்..கொந்தளித்த தமிழ் ஆர்வலர்கள்

    சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததாலேயே அவர் எழுந்து நிற்கவில்லை என சங்கர மடம் விளக்கம் அளித்திருப்பதை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

    எச் ராஜாவின் தந்தையான பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ்- சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நூலை வெளியிட்டார்.

    விழாவின் போது தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது ஆளுநர் உடபட அனைவரும் எழுந்து நின்றனர். ஆனால் விஜயேந்திரர் மட்டும் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    சங்கரமடம் அடடே விளக்கம்

    சங்கரமடம் அடடே விளக்கம்

    விஜயேந்திரரின் செயலுக்கு தமிழ் ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் காஞ்சி சங்கரமடம் விஜயேந்திரர் எழுந்து நிற்காதது குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதாவது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

    மேட்ச் ட்ரா..

    தமிழ்த்தாய் வாழ்த்தின்போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார்: சங்கரமடம் விளக்கம்
    ஆண்டாள் பற்றி பேசும்போது வைரமுத்து கனவில் இருந்தார்.. #மேட்ச்_ட்ரா

    இது அவருக்கு தெரியுமா?

    தமிழ்த்தாய் வாழ்த்தின் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார் - சங்கரமடம்
    இது விஜயேந்திரருக்கு தெரியுமா...

    கலைச்சிட்டிங்களா சாமி

    தமிழ்தாய் வாழ்த்தின் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார்.-சங்கரமடம்.#தேசியகீதம் பாடும்போது தியானத்தை கலைச்சிட்டிங்களா சாமி!

    இதை சட்டம் ஏற்குமா?

    தமிழ்த்தாய் வாழ்த்தின் போது காஞ்சி விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார் என சங்கர மடம் பல்டி.
    இதை சட்டம் ஏற்குமா?

    விஜயேந்திரர் வந்தார் டும்டும்

    ஆண்டாள் போய் விஜயேந்திரர் வந்தார் டும்டும்டும்....!

    English summary
    Netizens making fun of Sankara math explanation on Vijayenthirar Tamil Thaai Vazhthu issue. Sankara math has explained that Vijayendra was in meditation when the Tamil Thaai Vazhthu song was performed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X