திரும்பவும் சபதம் போடுவாங்களா...??
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சசிகலா உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளதை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில் சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட 4 பேரில் ஜெயலலிதா மட்டுமே அரசு பதவி வகித்து வந்தார். அவரை மட்டுமே ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் தண்டிக்க முடியும்.
அவருடைய மரணத்தை தொடர்ந்து அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் தங்களையும் தண்டிப்பது முறையானது அல்ல. ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஏற்கனவே ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலாதான் காரணம் என்ற கோபத்தில் உள்ள மக்கள் அவர் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்திருப்பதற்காக கலாய்த்துள்ளனர்.
|
நீதிக்கேட்டு கெஞ்சுகிறார்..
அட கடவுளே... திருடியவரே நீதிக்கேட்டு கெஞ்சுகிறார்... என்ன நாள் என சசிகலா மீது உள்ள கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் இந்த நெட்டிசன்!!!
|
சபதம் போடுவாங்களா...?
திரும்பவும் சபதம் போடுவாங்களா...? என கேட்கிறார் இந்த நெட்டிசன்...
|
சேர்த்து போட்டுக் குடுங்க..
ஜட்ஜ் ஐயா சின்னம்மா பாவம். தண்டனைய இன்னும் ரெண்டு வருஷம் கொஞ்சம் சேர்த்து போட்டுக் குடுங்க... என்கிறார் இந்த நெட்டிசன்
|
கழித்தே ஆக வேண்டும்
சசிகலா என்ன செய்தாலும் அவருடைய தண்டனை காலத்தை அவர் சிறையில் கழித்தே ஆக வேண்டும் என கூறுகிறார் இந்த வலைஞர்..












Click it and Unblock the Notifications