குழந்தைங்க, கர்பிணி பொண்ணுங்க, இதய நோயாளிங்க பாக்காதீங்க மொமண்ட் நவ்..ஜீயரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும் என்ற சடகோப ராமனுஜ ஜீயரை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
சென்னை: எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும் என்ற சடகோப ராமனுஜ ஜீயரை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
ஆண்டாள் குறித்த சர்ச்சை தொடர்பாக கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் என உண்ணாவிரதம் மேற்கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அதனை பாதியிலேயே கைவிட்டார்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜீயர் எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும். நாங்களும் கல் எறியக்கூடியவர்கள் தான். ஆனாலும் நாங்கள் அப்படி நடக்க மாட்டோம் என்றார்.
மேலும் பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் ஆண்டாள் சன்னதிக்கு வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும். இறை நம்பிக்கைக்கு எதிராக யாராவது பேசினால் இனி அமைதியாக போகமாட்டோம் என்றும் அவர் கூறினார்.
ஜீயரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அவற்றில் சில..
|
சொல்ல மறந்துட்டீங்களே..
கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் எங்களுக்கும் தெரியும்.. #ஜீயர்
அந்த குண்டு வைக்கிரத சொல்ல மறந்துட்டீங்களே..
|
பயிற்றுவிக்கிறதே நீங்கதானடே..
எங்களுக்கும் கல்லெறியவும், சோடா பாட்டில் வீசவும் தெரியும்: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்.
உங்களுக்கு அதெல்லாம் தெரியாதுன்னு யாருவே சொன்னது, எல்லா ரௌடி பயலுகளையும் பயிற்றுவிக்கிறதே நீங்கதானடே: மக்கள்
|
வேற ஜோக் சொல்லு..
மக்கள் : ஒரு நல்ல ஜோக் சொல்லு உன்ன விட்றுவோம்.
ஜுயர் : சோடா பாட்டில் வீச எங்களுக்கும் தெரியும்.
மக்கள் : ஜோக் நல்லா இல்ல, வேற ஜோக் சொல்லு...
|
அழுகும் சீசன் இதுதானே..
சாபம் விடுவேன்னு சொன்ன வாயெல்லாம், சோடா பாட்டில் விடுவேன்னு சொல்லுது..! ஞானப் பழங்கள்லாம் அழுகும் சீசன் இதுதானோ!?
|
தட் மொமண்ட் நவ்
நாங்களும் கல்லால அடிப்போம். சோடா பாட்டில் எறிவோம்-ஜீயர்
#தட் குழந்தைங்க... கர்பிணி பொண்ணுங்க...இதய நோயாளிங்க இதை பாக்காதீங்க மொமண்ட் நவ்