மீன் சாப்பிடாட்டி மீனுக்கும் நல்லது மனுஷனுக்கும் நல்லதுன்னு நிலை வந்திடுச்சே.. நெட்டிசன்ஸ் குமுறல்!
மீனில் பார்மலின் என்ற ரசாயணம் தடவப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக வெளியான தகவலை தொடர்ந்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் குமுறி வருகின்றனர்.
Recommended Video

சென்னை: மீனில் பார்மலின் என்ற ரசாயணம் தடவப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக வெளியான தகவலை தொடர்ந்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் குமுறி வருகின்றனர்.
சென்னையில் மனித உடலை பதப்படுத்த பயன்படுத்தப்படும் ஃபார்மலின் என்ற ரசாயனத்தை பயன்படுத்தி மீன்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து காசிமேட்டில் அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்று சோதனை நடத்தினர்.
இதேபோல் சைதாப்பேட்டை மீன் மார்க்கெட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனால் மீன் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
|
இனி நோ மீன்
பிணத்தை பதப்படுத்துற மருந்தாம்.. இனி நோ மீன் ஒன்லி சிக்கன்பர்கர்
|
மனுஷனுக்கும் நல்லது
மீன் சாப்பிடாட்டி மீனுக்கும் நல்லது மனுஷனுக்கும் நல்லதுன்னு நிலை வந்திடுச்சே
பார்மாலின் என்னும் கேன்சரை உண்டாக்கும் வேதிப் பொருள் மீனுள் இருப்பதை காசிமேடு, சிந்தாதரிப்பேட்டை பகுதிகளில் விற்கப்படும் மீன்களை சோதனை செய்ததில் தெரியவந்துள்ளது....
|
பூனைக்கு வச்சுபாருங்க
formalin(CH2O) இது இறந்தவர் உடலை பதப்படுத்த பயன்படுத்துவது. தற்போது மீன்களுக்கும் தடவப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு. பூனைக்கு நீங்கள் வாங்கிய மீனின் ஒரு பகுதி வைத்து அது சாப்பிடவில்லை என்றால் அது formalin தடவிய மீன்
|
இதெல்லாம் கிடையாதே
தூத்துக்குடி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கும்பகோணம் மாவட்டங்களில்
மீன்களில் புற்றுநோய் உருவாக்கும் ரசாயனம் கலந்திருப்பதாக அதிகாரிகள் கண்டுபிடிப்பு
மீன் விற்பனை பாதிப்பு - செய்தி
#சாகர்மாலா திட்டத்துல இதெல்லாம் கிடையாதே..?!
|
பதப்படுத்தல் முக்கியம்
தேவைக்கு குறைவான மீன்கள் என்றுதானே அமைச்சர் சொன்னார். அளவுக்கு அதிகமான மீன்கள் எனில் பதப்படுத்தல்தானே முக்கியம்.
|
மருந்து தடவப்படும் மீன்கள்
மருந்துப்பொடி தூவி நாட்டுவெடி வீசி பிடிக்கப்படும் ஆற்று குளத்து மீன்கள்
பிடித்த பின்னர் மருந்து தடவப்படும் கடல் மீன்கள்
முழுக்க மருந்தடித்து வளர்க்கப்பட்ட காய்கறிகள்
சாப்பிடும் நமக்கு விதவிதமான நோய்கள்
|
கவனத்துடன் வாங்கவும்
#கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நால்ரோடு செல்லும் சாலையில் புதிய மீன்மார்க்கெட் இயங்கி வருகிறது.
பார்மலின் எனப்படும் இந்த ரசாயனத்தை பயன் படுத்தினால் மீன்கள் கெடாமல் அப்படியே மாதக் கணக்கில் இருக்கும்.
வாங்கும் நண்பர்கள் சற்று கவனத்துடன் வாங்கவும் #கும்பகோணம்
|
காசேதான் கடவுளப்பா
மீன்கள் மேல் ஃபார்மால்டிஹைட் போட்டு விற்பனை....
காசே தான் கடவுளப்பா... ச்சை
|
கேன்சரை வரவழைக்கும்
மீன்கள் கெட்டுப்போகாமலிருக்கவும், கிருமிகளை அழிக்கவும் formalin-ஃபார்மாலின் சேர்க்கப்படுகிறதாம். சிந்தாதிரிப்பேட், காசிமேடு பகுதியில் வாங்கிய மீன்களின் சோதனையில் தெரிந்தது. ஃபார்மாலின் கேன்சரை வரவழைக்குமாம்.












Click it and Unblock the Notifications