சிறை வைக்கப்பட்ட சந்தோஷங்களை அள்ளி குடிக்கிறது பூமி..!! சமூக வலைதளங்களில் பறக்கும் #மழை டிவிட்ஸ்!
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சமூக வலைதளங்களில் மழை குறித்த டிவிட்ஸ் பகிரப்பட்டு வருகின்றன.
Recommended Video

சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சமூக வலைதளங்களில் மழை குறித்த டிவிட்ஸ் பகிரப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
இதனால் இதமான சூழல் நிலவி வரும் நிலையில் சமூக வலைதளங்களில் மழை குறித்த டிவிட்டுகளும் கவிதைகளும் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் சில..
[தமிழகம் மற்றும் சென்னையில் மழை எப்படி இருக்கும்? என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?]
|
சுற்றார் சூழ்ந்ததும்
மேகமெனும் சுற்றார் சூழ்ந்ததும் நிற்காமல் வருகிறது கண்ணீர்!
#மழை
|
அள்ளி குடிக்கிறது பூமி
சிறை வைக்கப்பட்ட சந்தோஷங்களை அள்ளி குடிக்கிறது
பூமி..!!
#மழை
|
கண்ணீர் தழும்ப நின்றுவிடுகிறாள்
தலையில் அவன் கொட்டியவுடன் அவள் கண்ணீர் தழும்ப நின்று விடுகிறாள்.. மழை!
|
ரசிக்கவே செய்கிறது மனம்
உன்னோடு சேரும் போதெல்லாம் என்னை மறக்கிறேன்.. உன்னில் எத்தனை ஆனந்தம் காண்கிறேன்... சிறு குழந்தையாய் மாறித்தான் போகிறேன் உனை கண்டதும்.. எனை தொட்டுத் தழுவி சென்றிடும் உனை ரசிக்கவே செய்கிறது மனம்... #மழை..
|
எவ்வளவு அழகானது
மழையும் கப்பலும்
கொஞ்சம் அதிகம் #மழை பெய்தாலே போதும் #நண்பர்கள் எல்லாரும் பேப்பர் கப்பலை செய்து தெருவோர வாய்களில் விட்டு அது போகும் அழகை கண்டு பின்னாடியே ஓடியது
அனுபவித்தவர்களுக்கு தெரியும் அந்த மழை காலம் எவ்வளவு அழகானது என்று
|
மழைச்சாரல்களாய்
நீ குறுஞ்செய்திகளில் தூதுவிட்ட காதல் துளிகள் யாவும் என்னிடம் வந்தடைந்தன அபார மழைச்சாரல்களாய்!
|
ஒரு குளியல்
மரம், செடி கொடி, மலர்களோடு
ஒரு குளியல்...
|
தோற்திடும் தருணங்கள்
மேகம் மூடிய வானமும்
சிறு தூரல் போடும் காலையும்
உடன் ஒரு கோப்பை காப்பியும்
கவிகளும் தோற்திடும் தருணங்கள்!












Click it and Unblock the Notifications