தமிழகம் மற்றும் சென்னையில் மழை எப்படி இருக்கும்? என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் இன்று இரவும் நாளையும் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று இரவும் நாளையும் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வரும் நிலையில் நேற்றிரவு முதல் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனிடையே தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி மிக மிக கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் 25சென்டி மீட்டருக்கு அதிகமாக அன்றைய தினம் மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
[தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மழை பெய்யும்.. சென்னை வானிலை மையம்]
இன்றும் நாளையும்
இந்நிலையில் மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் பதிவிட்டுள்ளார். அவர் பதிவில் கூறியிருப்பதாவது, சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்யும். தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் நல்ல மழை பெய்யும்.
காற்றழுத்தம்
மன்னார் வளைகுடா முதல் இலங்கை கடற்கரை நீடிக்கும் மேலடுக்கு சுழற்சியால் வட தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் திரண்டு நல்ல மழை பெய்யும். தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் குறைந்த காற்றழுத்தம் உருவாக ஏற்ற இடமாகவும் உள்ளது.
தமிழகம் முழுவதும்
இன்று மற்றும் நாளை நல்ல மழை பெறும் என்று எதிர்பார்க்கப்படும் மாவட்டங்களின் பெயர்களை கூற முடியாது. ஆனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் நாளையும் நல்ல மழை பெய்யும்.
மேற்கு மாவட்டங்களிலும்
திருவள்ளூர் முதல் தூத்துக்குடி வரை நாளையும் தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்யும். மேலும் மேற்கு தமிழகத்தின் சில மாவட்டங்களான கோவை, ஈரோடு , நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மாலை மற்றும் இரவில் மழையை பெறும்.
அடுத்த 2 நாட்களுக்கு சூப்பர்
ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு நல்ல மழை பெய்யும். அனைத்திற்கும் மேலாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்திற்கு மழை வாய்ப்பு நன்றாக உள்ளது. இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு