For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மழை பெய்யும்.. சென்னை வானிலை மையம்

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்திற்கு மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை- வீடியோ

    சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

    Chennai Metrological Centre says that rain will extend in Tamilnadu for 3 days

    தமிழகத்துக்கு கடந்த 7-ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில் தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது.

    [தமிழகத்தில் 8-ஆம் தேதி வரை கனமழை... 4 மாநில மீனவர்களுக்கு எச்சரிக்கை!]

    இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கன மழை முதல் மிக கன மழை பெய்யும். ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் நாளைக்குள் கரை திரும்ப வேண்டும். கன்னியாகுமரி கடல், தெற்கு கேரள லட்சத்தீவு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.

    குறிப்பாக அக்டோபர் 6 மற்றும் 8-ஆம் தேதி கடலுக்குள் செல்ல வேண்டாம்.
    தெற்கு அரபிக் கடல் பகுதி மிகவும் சீற்றத்துடன் காணப்படும் என்றார் அவர்.

    வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு

    English summary
    Chennai Metrological Centre says that rain will extend in Tamilnadu and Pondicherry for 3 days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X