கண்ணா இரண்டாவது லட்டு தின்ன ஆசையா? ரெடியா இருங்க!
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
சென்னை: ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 27 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுவை தாக்கல் செய்ய டிசம்பர் 4 ஆம் தேதி கடைசி நாளாகும். டிசம்பர் 5 ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற 7 ஆம் தேதி கடைசி நாளாகும்.
டிசம்பர் 24 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தல் குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
|
இரண்டாவது லட்டு..
கண்ணா இரண்டாவது லட்டு தின்ன ஆசையா? ரெடியா இருங்க!
|
இதுவே சாட்சி!
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மிக சுதந்திரமாக செயல்படுகிறது என்பதற்கு இதுவே சாட்சி!
நீதித்துறை, தேர்தல் ஆணையம், வருமான வரி துறை, இவை மூன்றும் ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை!
இந்தியாவில் ?? இவை கைப்பாவையாக
|
ஆர்கே நகரை நாங்க வச்சுக்கறோம்..
சின்னத்தை நீ வச்சுக்கோ.. ஆர்கே நகரை நாங்க வச்சுக்கறோம்..
|
நேர்மையை நிரூபிக்கும் பாருங்க
இவ்வளவும் பண்ணிட்டு தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக பாஜக வேட்பாளரை நிறுத்தி தன் நேர்மையை நிரூபிக்கும் பாருங்க...
|
பாத்துக்கொங்க ஆர்கே நகர் மக்களே!
காசுக்கு ஓட்டு போட்டால் மழை காலத்தில் மழை நீரும் கழிவு நீரும் கால்வாய்களில் ஓடாமல் தங்களின் வீட்டினுள் ஓடும், பாத்துக்கொங்க ஆர்கே நகர் மக்களே !
|
இன்னைக்கு தேர்தல் அறிவிப்பு
நேற்று சின்னம்... இன்னைக்கு தேர்தல் அறிவிப்பு..
ஆனா இதுல எந்த அரசியல் தலையீடும் இல்லை. இதை நம்பாட்டி நீயும் #ஆன்டி இன்டியன்
#இரட்டைஇலை
|
அடுத்த பிறவிலயாவது
3 ஆண்டில் 3 தேர்தல்.. அடுத்த பிறவிலயாவது பணம் கொழிக்கும் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராய் பிறக்க வேண்டும்...