அதென்ன மத்த கட்சி இருக்கிற மாநிலத்துல மட்டும் ஏன் ஆய்வு.. எச். ராஜாவுக்கு நெட்டிசன்கள் கேள்வி!
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் ஆய்வு நடத்தியது வரவேற்க தக்கதுதான் என கூறிய எச் ராஜாவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகி்ன்றனர்.
Recommended Video

சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் ஆய்வு நடத்தியது வரவேற்க தக்கதுதான் என கூறிய எச் ராஜாவை நெட்டிசன்கள் வெளுத்து வருகின்றனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் ஆளுநரின் ஆய்வுக்கு ஆதரவாக எச் ராஜா டிவிட்டியிருந்தார். இதைத்தொடர்ந்து அவரை வெளுத்து வாங்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.
|
ஜனாதிபதி கண்காணிக்க வேண்டும்
அப்படியே பிரதமர் வேலையையும், ஜனாதிபதி ஆலோசனை செய்து கண்காணிக்க வேண்டும்.. என்கிறார் இந்த நெட்டிசன்..
|
சொல்லுங்க ப்ரோ..
மாநில சுயாட்சிக்கு அர்த்தம் என்னன்னு சொல்லுங்க ப்ரோ... என கேட்கிறார் இந்த வலைஞர்
|
மீனவர்களை சுடும்போது..
இதெல்லாம் நல்லா பேசுறீங்க... மீனவர்களை சுடும்போது உங்களோட டிவிட்ட அக்கவுண்ட் வொர்க் ஆகலயா? என கேட்கிறார் இந்த நெட்டிசன்
|
ஆய்வு செய்து அம்பலபடுத்தலாமா?
ஆமாம் ஜி, நாம ரெண்டு போரும் போய் அமித்ஷா மகன் ஜெய்ஷா ஊழலை ஆய்வு செய்து அம்பலபடுத்தலாமா? என கேட்கிறார் இந்த வலைஞர்
|
நடவடிக்கை எடுக்கவில்லையே..
நல்ல வேளை தான் ஆனால் அனைத்து துறைகளிலும் ஆய்வு செய்ய வேண்டும்.. இதற்கு முன்னர் கொடுக்கப்பட்ட எந்த ஒரு குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்? என கேட்கிறார் இந்த நெட்டிசன்..
|
ஆய்வு பண்றீங்க?
பிஜேபி ஆளும் மாநிலங்களில் இப்படி ஆய்வு பண்ண மாதிரி தெரியலயே.. அதென்ன மத்த கட்சி இருக்கும் மாநிலங்களில் மட்டும் ஆய்வு பண்றீங்க? என கேட்கிறார் இந்த நெட்டிசன்












Click it and Unblock the Notifications