என்னாது ரவி சாஸ்திரி கோச்சா??.. வதந்திக்கே கொந்தளித்து குமுறி விட்ட நெட்டிசன்கள்!!
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் காட்டுத் தீ போல பரவியதுமே சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளித்து விட்டனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே கோஹ்லியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய கோச்சாக்கான நேர்காணல் நடைபெற்று வந்தது.
இதில் சேவாக், ரவிசாஸ்திரி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்நிலையில் ரவிசாஸ்திரி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவின. அவ்வளவுதான் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொதித்து குமுறி விட்டனர். சாஸ்திரி நியமிக்கப்படவில்லை என்ற தகவல் வந்ததும்தான் ரசிகர்கள் அமைதியாகியுள்ளனர்.
முன்னதாக கொந்தளித்த ரசிகர்களின் குமுறல்களிலிருந்து சில துளிகள்:
Recommended Video

|
கேவலமான முடிவு
கேவலமான முடிவு எனக்கூறியுள்ளார் இந்த நெட்டிசன்
|
இதுதான் சூதாட்டம்
இதுதான் சூதாட்டம் என அழைக்கப்படுகிறது என்கிறார் இந்த நெட்டிசன்...
|
சிறந்த அரசியல்வாதி
கோஹ்லி ஒரு சிறந்த பேட்ஸ்மேன் மட்டும் அல்ல.. சிறந்த அரசியல்வாதியும் கூட என்கிறார் இவர்...
|
கெட்டக்காலம் ஆரம்பித்துவிட்டது..
ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோஹ்லியின் திட்டம் பலித்து விட்டது... ரவி சாஸ்திரிதான் தற்போதைய கோச்.. நம் கிரிக்கெட்டின் கெட்டக்காலம் ஆரம்பித்துவிட்டது... என்கிறார் இந்த நெட்டிசன்..
|
கோஹ்லி கோட்டா
ரெய்னா, ஜடேஜா, அஷ்வின், விஜய் ஆகியோர் டோணியின் கோட்டா என்றால் ரவிசாஸ்திரி விராட் கோஹ்லி கோட்டாவில் இருந்து வந்துள்ளார்... என்கிறார் இந்த நெட்டிசன்..












Click it and Unblock the Notifications