ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துவிடலாம் 'ஆண்டவரே'!
டிவிட்டரில் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சென்னை: டிவிட்டரில் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வடசென்னைக்கு ஆபத்து என்று நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தவறு நடந்தபின் அரசை விமர்சிக்காமல் வருமுன் காக்க இது ஒரு வாய்ப்பு என்று கமல் கூறியுள்ளார்.
அரசை எச்சரித்துள்ள அவரது இந்த பதிவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்துள்ளனர். அவற்றில் சில
|
வந்துரு ஆண்டவா
நடந்த தவறையே இந்த அரசு ஒத்துக்காது... இதுல இதை எங்க இவனுங்க கேட்க போராணுங்க.. நீ கம்முன்னு வந்துரு ஆண்டவா.. என்கிறது இந்த டிவிட்
|
ஒரு நற்குணம்
அக்கறை எடுத்து மெனக்கெடுவதும் ஒரு நற்குணம்... என்கிறார் இந்த வலைஞர்
|
அரசை காப்பாற்றுவதுதான் முக்கியம்
ஆற்றை காப்பாற்றுவதை விட இந்த அரசிற்கு தங்கள் ஆட்சியை காப்பாற்றுவதே முக்கியமாக உள்ளது.. நாம் போராடினாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு தான்.. என்கிறது இந்த டிவிட்
|
ஆண்டவர் சொல்வதை கேளும்
ஆளுபவர்களே ஆளபோகும் ஆண்டவர் சொல்வதை கேளும்.. என்கிறார் இந்த வலைஞர்..
|
தன்னிகரில்லா தலைவனே தேவை
தவறுகளை சுட்டிக்காட்டும் தன்னிகரில்லா தலைவனே தேவை உம்மைப்போல்... என்கிறது இந்த டிவிட்
|
ஆம் ஆத்மி கட்சியில் சேரலாம்
சார் இதுபோன்ற பிரச்சனைகள் தொடர்பா குரல் கொடுக்கும் ஆம் ஆத்மி கட்சியில் நீங்கள் சேரலாம்... என்கிறது இந்த டிவிட்