தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியது யார் என்று தெரியாமல்தான் ஜல்லிக்கட்டுக்கு பொங்குனீங்களா ஜூலி?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து எழுதியது யார் என்ற கேள்விக்கு, தாயுமானவர் என பதிலளித்து அதிர்ச்சியூட்டியுள்ளார், ஜல்லிக்கட்டு போராளி என்ற அறிமுகத்தோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் காலடி எடுத்து வைத்த ஜூலியானா.
கேமரா முன்பு இதற்கு முன்னதாக நடித்ததே இல்லை என்று கூறியபடி அறிமுகமான ஜூலியின் உண்மை முகம் தினமும் சோஷியல் மீடியாவில் அம்பலப்பட்டு வருகிறது.
ஜூலி இதற்கு முன்பு விளம்பர படத்தில் நடித்துள்ளதாகவும், கிறிஸ்தவ மத டிவி சேனலில் தொகுப்பாளராக பணியாற்றியதாகவும், ஆதாரங்களோடு வீடீயோக்களை அவிழ்த்துவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.
தாயுமானவராம்
இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து நேற்று பிக்பாசில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அதை எழுதியது தாயுமானவர் என பதிலளித்துள்ளார் ஜூலி. தமிழ் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை காக்க அவதாரம் எடுத்தவர் என்பதை போன்ற பிம்பம் உருவாக்கப்பட்ட ஜூலி, தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியது மனோன்மணியம் சுந்தரனார் என்பதை அறிந்திருக்கவில்லை என்பது நிகழ்ச்சியை பார்த்த மக்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. ஜூலியை ஓட்டும் சில மீம்களை நீங்களே பாருங்கள்.
|
கமலைவிட அதிக கெட்அப்
போராளி ஜூலி, விஜே ஜூலி, ஆக்ட்ரஸ் ஜூலி, ஆங்கர் ஜூலி, நர்ஸ் ஜூலி - யப்பா டேய்ய், இது கமல விட அதிக கெட்டப்ப போட்டிருக்கு
|
பாவம், அவரே கன்ப்யூஸ் ஆகிட்டாரு
தமிழ்தாய் வாழ்த்து எழுதியவர் தாயுமானவர் -ஜூலி
அய்யோ பாவம் பத்து நாள்ல வீர தமிழச்சியே கன்பீஸ் ஆயிருச்சு
|
தாய்மாமான்னு சொல்லலியே
தமிழ்தாய் வாழ்த்து எழுதியவர் தாயுமானவர் -ஜூலி
எழுதியவர் அதோட தாய்மாமான்னு சொல்லலேன்னு சந்தோசப்பட்டுக்குவோம்
|
நல்லவேளை பாரதியார் காதை சுற்றி துண்டுகட்டினாரு
சினேகன் : தமிழ்தாய் வாழ்த்து எழுதியவர் யார் ??
நீ சொல்லு ஜூலி
ஜூலி : தாயுமானவர்