'எப்புட்றா'.. கார் வந்தது... கடை திறந்திருந்தது.. கடையிலேயே இது எப்படி இப்படி?
சென்னை: 'எப்புட்றா' என்று ஒரு சிறுவன் ஆச்சர்யத்துடன் கேட்பான், அந்த மீம்ஸ் டெம்பளட் இன்று பல மீம்ஸ்களில் பகிரப்படுகிறது. நிஜமாகவே சில விஷயங்கள் நமக்கே ஆச்சர்யமாக தோன்றும்.. அப்படியான ஒரு விபத்து வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதனை இப்போது பார்ப்போம்.
இன்றைக்கு சமூக ஊடகங்கள் பல விஷயங்களை பற்றி பேசுகின்றன. இதில் நல்லதும் இருக்கிறது.. கெட்டதும் இருக்கிறது. சமூக ஊடங்களில் ஆதிக்கம் செலுத்துவோர் செய்வது தான் செய்திகளாக மாறும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. வரும் காலங்களில் ஊடகங்களைவிட சமூக ஊடகங்களே கட்டி ஆளப்போகின்றன.

சமூக ஊடகங்களில் பகிரப்படுவது உண்மையோ, பொய்யோ அது இரண்டாவது தான். முதலில் வேகமாக பரவும். அப்புறம் தான் அது பொய் செய்தி என்பதே மக்களுக்கு போய் சேரும். அதேநேரம் அதிகப்படியான பொய் செய்திகள் காரணமாக மக்கள் இப்போது முன்பு விட அதிக கவனமாக சமூக ஊடங்களில் இருக்கிறார்கள்.
சமூக ஊடங்களில் செய்திகளை தாண்டி மீம்ஸ்தான் கொடி கட்டி பறக்கிறது. வீடுகளில், ஊர்களில் புரணி பேசுவது போல், வார இறுதிகளில் கண்டட்தேடி அலைகிறார்கள். சிக்குவோரை வச்சு செய்கிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், திரை நட்சந்திரங்கள் என யாராக இருந்தாலும் இவர்களிடம் சிக்கி அடிவாங்குவது தொடர்கிறது.
எப்புட்றா 😂😂😂 pic.twitter.com/SeGkgkvoVV
— ATC New (@atcspaces) December 23, 2023
அதேபோல் சமூகஊடங்கள் தான் மக்களின் பிரச்சனைகளை ஆழமாக விவாதிக்கின்றன.. தூத்துக்குடி வெள்ளமாகட்டும், சென்னை நிஜாம்புயல் மழையாகட்டும், வெள்ள பாதிப்பு தொடர்பான அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் பேட்டிகள் ஆகட்டும் எல்லாமே சமூக ஊடகங்களில் கடுமையாக விவாதிக்கப்படுகிறது. சமூக ஊடகங்களில் மீம்ஸ் மூலம் கேலி கிண்டல் நையாண்டி என எல்லாமே வேறலெவலில் இருக்கும்.
இந்நிலையில் 'எப்புட்றா' பாணியில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. கார் ஒன்று டயர் கடையை நோக்கி வந்து கொண்டிருந்தது. திடீரென டயர் நேராக கழன்று வந்து டயர் கடைக்குள்ளே சரியாக டயர் கழண்டு வந்து விழுகிறது. எந்த ஊர் என்று தெரியவில்லை..அண்மையில் நடந்த சம்பவம் போல் தான் இருக்கிறது. அதை பார்த்து தான் நெட்டிசன்கள் எப்புட்றா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications