யோவ் மாமா.. மரியாதையா கதவ திற.. ஆடி முடிஞ்சி ஆவணி பொறந்துடுச்சு!
சென்னை: ஆடி மாதம் முடிந்து ஆவணி பிறந்து விட்டது, மீண்டும் புதுப்பொண்ணை புகுந்த வீட்டிற்கு அனுப்புங்கள் என மாமனார் வீடுகளுக்கு மீம்ஸ் விடு தூது அனுப்பி வருகின்றனர் புதுமாப்பிள்ளைகள்.
ஆடி மாதம் பிறந்து விட்டாலே புதுமணத் தம்பதிகளைப் பிரித்து வைத்து விடும் வழக்கம் நம்மூரில் உள்ளது. இதற்கு ஆயிரத்தெட்டு நல்ல காரணங்கள் சொல்லப்பட்டாலும், புதுமணத்தம்பதிகளுக்கு கொஞ்சம் மனதிற்கு கஷ்டமான விசயம்தான். அதனால்தான் ஆடி முடிந்து ஆவணி எப்போது பிறக்கும் என அவர்கள் காலண்டரில் ஒவ்வொரு நாளாக எண்ணிக் கொண்டிருப்பார்கள்.
அவர்கள் எதிர்பார்த்தபடியே, ஒரு வழியாக ஆடி முடிந்து ஆவணி பிறந்து விட்டது.. பிறகென்ன புதுமாப்பிள்ளை மற்றும் புதுமணப் பெண்களை கையில் பிடிக்க முடியவில்லை. மீண்டும் தங்களது கணவன்/மனைவியைச் சந்திக்கப் போகும் குஷியில், விதவிதமான மீம்ஸ்களை சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். சைடுகேப்பில் முருங்கைக்காய் மீம்ஸ்களையும் பகிர அவர்கள் மறக்கவில்லை.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications