எவ்வளவு மார்க் எடுத்தாலும் என்ஜினியரிங் மட்டும் சேராதீங்க: தெறிக்கும் ப்ளஸ் 2 மீம்ஸ்
சென்னை: ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் தெறிக்கின்றன.
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த ஆர்த்தி, ஜஸ்வந்த் ஆகியோர் 1, 200க்கு 1,195 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து சமூக வலைதளங்களில் பலர் மீம்ஸ் வெளியிட்டு வருகிறார்கள்.
|
என்ஜினியரிங்
எவ்வளவு மார்க் எடுத்தாலும் என்ஜினியரிங் மட்டும் சேர்ந்துடாதீங்க என்று ஒருவர் மாணவ, மாணவியரை கேட்டுக் கொண்டுள்ளார்.

ஸ்டேட் ராங்க்
ப்ளஸ் 2 தேர்வில் இரண்டு பேர் மாநிலத்தில் முதலிடம் பிடித்தால் இப்படி தான்.

மார்க்
ப்ளஸ் மாணவர்களிடம் அவர்களின் மதிப்பெண்களை கேட்டால் பதிலுக்கு அவர்கள் நம்மிடம் நாம் எடுத்த மதிப்பெண்களை கேட்பார்கள்.

ரிசல்ட்
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்த பிறகு நண்பர்கள் சொல்லும் டயலாக் இது தான்.

மறந்துடுவாங்க
மதிப்பெண்களை பற்றி கவலைப்படாதீங்க. என்ஜினியரிங் சேர்ந்தவுடன் அதை மறந்துவிடுவாங்க.

உறவினர்கள்
பிற நாட்களில் கொஞ்சமாக நச்சரிக்கும் உறவினர்கள் ப்ளஸ் 2 தேர்வு முடிவு வந்தால் மார்க்கை கேட்டு ஓவராக பேசுவார்கள்.

பதிவு எண்
ப்ளஸ் 2 தேர்வு எழுதியவர்களிடம் உறவினர்கள் அவர்களின் பதிவு எண்ணை கேட்டால் கிடைக்கும் பதில், அந்த கடையை மூடுங்க.

உண்மை
ப்ளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்காவிட்டால் அவர்கள் அன்றைய தினம் உறவினர்களின் கண்ணில் படாமல் இருக்க படாதபாடு படுவார்கள்.












Click it and Unblock the Notifications