பார்க்குறவங்க குழம்பிடக் கூடாதுனு ‘மாடு’னு எழுதி வச்சிருக்காங்களே.. அந்த மனசுதான் சார் கடவுள்!
மாட்டுப் பொங்கல் கோலங்கள் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: மாட்டுப் பொங்கலுக்காக வீட்டு வாசல்களில் வரையப் படும் மாடுகளை வைத்து ஜாலி மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
தைப் பொங்கலின் அடுத்த தினமான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. உழவுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. சில வீடுகளில் மாடுகளைக் கொண்டாடும் வகையில், வீட்டு வாசலில் தங்களுக்கு தெரிந்த அளவிற்கு மாடுகளை, 'அழகாக' வரைந்து கோலமாகப் போட்டுள்ளனர். அதை சிலர் சமூகவலைதளங்களில் பதிவிட, விடுவார்களா நெட்டிசன்கள். ஒவ்வொரு கோலத்தை வைத்தும் விதவிதமான மீம்ஸ்களாக தட்டி வருகின்றனர்.

நிஜமாகவே சம்பந்தப்பட்ட மாடுகள் கவலைப்படுகிறதோ இல்லையோ, மாடுகளின் மைண்ட்வாய்ஸ்களாக மாறி மீமர்கள் இந்தக் கோலங்களைக் கலாய்த்துள்ளனர். கோலம் போட்டவர்களும் சளைத்தவர்களில்லை. சில கோலங்களில் மாடு எனச் சொன்னால் கன்னுக்குட்டிக்கூட நம்பாது. அந்தளவிற்கு தாங்கள் கற்றுக் கொண்ட வித்தையையெல்லாம் வாசலில் களமிறக்கி இருக்கின்றனர்.
இதோ அப்படியாக மாட்டுப் பொங்கல் ஸ்பெஷல் கோலங்கள் பற்றியான சில ஜாலியான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

















Click it and Unblock the Notifications