எவன்டா இருமல்னு பேர் வைச்சது.. வந்தா இருந்துட்டே இருக்கு.. பேசாம போமல்னு மாத்துங்க!
சென்னை : மழைக்காலம் வந்து விட்டாலே அழையா விருந்தாளியாக வந்து ஒட்டிக் கொள்ளும், சளி, இருமல் மற்றும் காய்ச்சலை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
வெயில் கொளுத்தி எடுக்கும் காலங்களில், கொஞ்சம் மழை வந்தால் நன்றாக இருக்குமே என மனம் ஏங்கும். ஆனால் மழைக்காலம் வந்து ஊரெல்லாம் குளிர்ந்து போய்க் கிடக்கும் போது, அதன் இலவச இணைப்பாக சளி, இருமல், காய்ச்சல் என ஏதாவது வந்து தொற்றிக் கொள்ளும். மழையை ரசிக்க விடாமல், ஒரு வாரமாவது படுத்தி எடுத்து விட்டுத்தான் திரும்பவும் உடல் இயல்புநிலைக்குத் திரும்பும்.
இப்படி பாடாய் படுத்தி எடுக்கும் சளி, இருமலையும் நம் மக்கள் நகைச்சுவையாக மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர். அதோடு, மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது குறித்தும், மழை வராமல் சில மாவட்டங்களில் ஏமாற்றியதை வைத்தும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மழை ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications